#எச்சரிக்கை…10 நாட்களில் 800-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு – “பொது சுகாதார அவசர நிலை” பிறப்பித்த அரசு!

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக,மாவட்ட நிா்வாகம் சாா்பில்,மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில்,அது காலராவுக்கான அறிகுறியாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில்,கடந்த 10 நாட்களில் 800-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி,வயிற்றுப்போக்கு,மயக்கம் போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் காலரா நோய் பரவும் அபாயம் இருப்பதாக புதுச்சேரி சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில்,காரைக்கால் மாவட்டத்தை “பொது சுகாதார அவசர நிலையாக”  புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக,புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள … Read more