#BREAKING: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்று அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை (4-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

தொடர் கனமழையால் புதுச்சேரி, காரைக்காலில் ஏற்கனவே இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை வரும் 6-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

கனமழையால் ஆங்காகே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கனமழை தொடர்வதால் தற்போது, இரண்டாவது நாளாக நாளை புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment