#Shocking:பெரும் சோகம்…ஹோட்டலில் பயங்கர வெடி விபத்து- 22 பேர் பலி;70-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

கியூபாவின் தலைநகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு பிரபல சொகுசு ஹோட்டலின் முகப்பில் இயற்கை எரிவாயு கசிவு காரணமாக ஒரு சக்திவாய்ந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் சிக்கி,ஒரு குழந்தை உட்பட சுமார் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,இந்த வெடி விபத்தில் சுமார் 74 பேர் படுகாயமடைந்துள்ளதாக கியூபா சுகாதார அமைச்சின் மருத்துவமனை சேவைகளின் தலைவர் டாக்டர் ஜூலியோ குர்ரா இஸ்கியர்டோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து,விரைவில் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு … Read more

உலகில் முதல் முறையாக குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்தது கியூபா!

உலகில் முதல் முறையாக குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி கியூபா நாட்டில் செலுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்பொழுது வரையிலும் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளிலும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பல நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சில நாடுகளில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு … Read more

கியூபாவில் முதல்முறையாக பிடல் காஸ்ட்ரோவிற்கு பிறகு பிரதமராக மானுவல் மார்ரீரோ நியமனம்!

கியூபாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டம் அதிபரின் பணிசுமையை குறைக்க வகை இருந்தது. இதை தொடர்ந்து தற்போது கியூபா நாட்டின் பிரதமராக  சுற்றுலா அமைச்சர் மானுவல் மார்ரீரோ க்ரூசை நியமிக்கப்பட்டு உள்ளார். அமெரிக்காவின் அண்டை நாடான கியூபா  கரீபியன் கடலில் அமைந்துள்ளது. 90 வருடங்களாக அமெரிக்காவை எதிர்த்து கியூபா வந்துள்ளது. அமெரிக்காவை விட 90 மடங்கு சிறிதாக உள்ள கியூபா எப்படி அமெரிக்காவை எதிர்க்க முடிந்தது என பலர் பலர் ஆச்சரியமாக பார்த்தாலும் … Read more

சென்னை திரைப்பட விழா: கம்யூனிஸ நாடான கியூபாவை மையமாக வைத்து 84 விருதுகளை அள்ளிய படத்தின் ட்ரைலர் தமிழில் வெளியீடு..!!!

சென்னை திரைப்பட விழாவில் கடந்த 2011-ம் ஆண்டு  HABANA STATION என்கிற திரைப்படம் வெளிவந்தது. இப்படமானது முழுக்க முழுக்க கியூபாவில் உள்ள ஹவானா நகரத்தில் மேற்குப் பகுதியில் வாழும் குடிசைவாழ் மக்களுடைய பகுதி ஒன்றில் படமாக்கப்பட்டது.கம்யூனிஸ நாடான அந்த நாட்டில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்துகிறது.மேலும் இரு மாணவர்களை மையமாக வைத்து கதையானது நகர்கிறது.கம்யூனிஸ நாடான கியூபாவில் இன்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்திறது என்பதை இந்த குறும்படம். அவ்வாறு வெளியாகிய  இந்த திரைப்படத்துக்கு 84 விருதுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பில் இருக்கும் வாக்கு பெட்டியில் வாக்களிக்கும் கியூபா ஜனாதிபதி…!!

கியூபாவில் தற்போது அங்குள்ள மாநகராட்சிகளுக்கான தேர்தல் தற்போது நடந்து வருகிறது.இந்நிலையில் அங்குள்ள வாக்குசாவடியில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பில் உள்ள வாக்கு பெட்டியில் தனது வாக்குகினை செலுத்துகிறார் கியூபாவின் ஜனாதிபதி எஸ்டேபான் லாஜோ ஹெர்னாண்டஸ் (Esteban Lazo Hernández). ஆனால் நமது நாட்டில் காவல்துறை அல்லது இராணுவத்தினரின் பாதுகாப்பில் வாக்கு செலுத்தும் எந்திரம் இருந்தாலும் அங்கு முறைகேடுகள் நடக்கின்றன.

‘சுகாதாரத் தாக்குதல்கள்’ குறித்து அமெரிக்காவுக்கு கியூபா கண்டனம் !!!

‘சுகாதாரத் தாக்குதல்கள்’ குறித்து  அமெரிக்கக் தூதரக ஊழியர்கள் குறைப்புக்கு கியூபா கண்டனம் செய்கிறது கடந்த வாரம் அரச துறையானது ஊழியர்கள் குறைப்புகளை நிரந்தரமாக்கியது. ஆரம்பத்தில் குறைந்தபட்சம் 24 அமெரிக்க குடிமக்களை பாதிக்கும் இழப்பு மற்றும் பிற வியாதிகளுக்கு பதில் அக்டோபர் மாதம் பணியாளர்களைத் திரும்பப் பெற்றது. அமெரிக்க புலனாய்வாளர்கள் ஒரு காரணத்தை உறுதிப்படுத்தவில்லை மற்றும் கியூபா எந்த தவறும் செய்யவில்லை. அமெரிக்க தூதரக அதிகாரிகளை பாதிக்கும் மர்மமான வியாதிகளுக்கு பதில் அமெரிக்க தூதரக ஊழியர்களில் 60 சதவிகிதத்தை திரும்பப் … Read more

பிடல் காஸ்ட்ரோவின் மகன் மனஅழுத்தத்தால் தற்கொலை

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் மகனும் சோவியத் யூனியனில் கியூபாவுக்காக அறிவியல் ஆலோசகராக பணியாற்றிய  பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் டியாஜ் பலார்ட் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடுமையான மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. மேலும் செய்திகளை படிக்க தினசுவடுடன் இணைந்திருங்கள்

வெனிசுலா மீது பொருளாதார மற்றும் இராணுவ தடைகளை விதித்த ஐரோப்பிய யூனியன்.. கண்டித்த கியூபா ..,

வெனிசுலா மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதார மற்றும் இராணுவ தடைகளை விதித்து உள்ளது. இதற்கு கியூபா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. வெனிசுலாவின் சமாதான முயற்சிக்கு இது எதிர் விளைவுகளையே உருவாக்கும். வெனிசுலாவை ஏகாதிபத்திய நிர்ப்பந்தம் மூலமாக பணிய வைக்கவே இந்த தடைகள் விதிக்கப்பட்டு உள்ளது. “பத்து லட்சம் ஐரோப்பிய மக்கள் வெனிசுலாவில் வாழ்கிறார்கள். அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்”-என்பதை ஐரோப்பிய நாடுகள் கணக்கில் கொள்ள வேண்டும் என வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுராவும் கேட்டு கொண்டு உள்ளார்.