நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு. டெல்லி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளைக்கு பதில் முன்கூட்டியே இன்றே முடித்துக்கொள்ளப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் அனைத்து அலுவலகங்களும் ஏற்கனவே முடிந்ததால் இன்றுடன் முடிவு பெற்றது. மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார். இதனிடையே, பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஜனவரி 31ம் தொடங்கி, பிப்.1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னா் கூட்டத்தொடரின் முதல் … Read more

#LIVE: தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல்! இதோ உங்களுக்காக!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்து வருகிறார். இதுபோன்று வேளாண் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. காகிதமில்லா சட்டமன்றம் திட்டத்தின் கீழ் கணினி மயமாக்கப்பட்டுள்ள ஜார்ஜ் கோட்டை சட்டமன்ற … Read more

மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு. சென்னை கிண்டியில் தூர்தர்ஷன் வழங்கும் மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட தொழில், வர்த்தக நிறுவன பிரதிநிதிகள், மத்திய அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடிப்படை கட்டமைப்பு … Read more

பாஜக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்களிலேயே மிக மோசமானது இதுதான் – தொல்.திருமாவளவன்

ஏழை எளிய மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கை என்று மத்திய பட்ஜெட் குறித்து விடுதல் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை. மத்திய பட்ஜெட் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடி அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை வழக்கம்போல கார்ப்பரேட்டுகளுக்கு உதவுவதாகவும், நடுத்தர ஏழை எளிய மக்களை மேலும் வறுமையில் ஆழ்த்துவதாகவும் இருக்கிறது. இந்த மக்கள் விரோத பட்ஜெட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த பட்ஜெட்டில் வைரத்துக்கான … Read more

#பட்ஜெட்2022: விலை அதிகரிக்கும் பொருட்கள்? விலை குறையும் பொருட்கள் எவையெவை?

மத்திய பட்ஜெட்டில் விலை அதிகரிக்கும் பொருட்கள் ஹெட்ஃபோன்கள் குடைகள் கவரிங் நகைகள் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்டவை என தகவல். நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில், புதிய டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தும் திட்டம், 25 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம் மற்றும் குடிநீர் இணைப்பு திட்டம் உட்பட பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், … Read more

“வீடில்லாதவர்களுக்கு வீடு;சாத்தியமானவைகளை உள்ளடக்கிய பட்ஜெட்” -ஓபிஎஸ் வரவேற்பு!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை,சாத்தியமானவைகளை உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கையாக உள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்ட 2022-2023 ஆம் ஆண்டிற்கான மத்திய வரவு-செலவுத் திட்டத்தினை அதிமுக  சார்பில் வரவேற்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: அதிமுக சார்பில் வரவேற்பு: “மத்திய நிதி அமைச்சர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட 2022-2023 … Read more

#BREAKING: 59 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ்!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 59 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 467 புள்ளிகள் அதிகரித்து 59,330 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி136 புள்ளிகள் அதிகரித்து 17,713 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது. மத்திய பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022-23-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் … Read more

வரவிருக்கும் டிஜிட்டல் கரன்சிக்கு என்ன பெயரிடுவீர்கள்? – நெட்டிசன்களின் சுவாரஸ்யமான பதில்கள் இதோ!

இந்தியாவில் வரவிருக்கும் டிஜிட்டல் கரன்சிக்கு என்ன பெயரிடுவீர்கள்? என்று பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு,ட்விட்டர் பயனர்கள் அளித்துள்ள பதில்களை கீழே காண்போம். 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.அப்போது 2022- 2023 ஆம் நிதியாண்டில் சென்ட்ரல் பாங்க் டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது எனவும், இந்தியாவின் முதன்மை வங்கியாக விளங்கும் ரிசர்வ் வங்கியுடன் இணைந்து இந்த டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று … Read more

நாடு முழுவதும் உள்ள பாஜக உறுப்பினர்களுடன் இன்று பேசுகிறார் பிரதமர் மோடி!

டெல்லி:நாடு முழுவதும் உள்ள பாஜக உறுப்பினர்களுடன் மத்திய பட்ஜெட் குறித்து இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி பேசுகிறார். கடந்த ஜனவரி 31 ஆம் தேதி மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் தொடங்கிய நிலையில்,நேற்று மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில்,சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும்,இதனால் விவசாயிகள், … Read more

மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத பட்ஜெட்2022..! – கமலஹாசன்

நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் அவர்கள், 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த  நிலையில், மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத  #Budget2022 இது என கமலஹாசன் ட்வீட்.  நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் அவர்கள், 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் … Read more