விவசாயிகள் பிரச்சனையில் உண்மையாக செயல்படுகிறோம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

விவசாயிகள் பிரச்சனையில் மத்திய அரசு உண்மையாக செயல்பட்டு வருகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தங்கள் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் போராட்டம் குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பிரதமர் மோடி, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூறினார். செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில், “மத்திய அரசு 3 … Read more

முந்தைய காங்கிரஸ் அரசு மீது குற்றச்சாட்டு! மத்திய அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள்

இந்தியப் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 10 ஆண்டு கால பொருளாதாரச் செயல்பாடுகளை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 10 ஆண்டு கால பொருளாதாரச் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி வெள்ளை அறிக்கையில், 2014-ல் பாஜக … Read more

நிதியை நிர்மலா சீதாராமன் எப்போது யாரிடம் கொடுத்தார்? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி!

nirmala sitharaman seeman

சென்னையில் நேற்று  நடைபெற்ற விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் 2014 – 2023 வரை இருந்து மத்திய அரசு பெற்ற வரி ரூ.6.23 லட்சம் கோடி. அதிலிருந்து  தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.6.96 லட்சம் கோடி தமிழகத்தில் இருந்து பெற்ற வரியைவிட  கூடுதலாக தான் நிதி கொடுத்து இருக்கிறோம் என கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் … Read more

மூன்று நாள் பயணமாக இன்று இலங்கை செல்லும் நிர்மலா சீதாராமன்!

Nirmala Sitharaman

இலங்கை செல்லும் நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் அரசு முறை பயணமாக இன்று இலங்கை செல்ல உள்ளார். அங்கு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் SBI வாங்கி கிளைகளை திறந்துவைக்கும் நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாண நூலகம், கலாச்சார மையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். பின்னர், இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்த 200வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், இலங்கை அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட NAAM 200 … Read more

விவசாயிகளுக்கு நற்செய்தி.! GST கவுன்சில் கூட்டத்தில் நிதி அமைச்சர் முக்கிய அறிவிப்பு.! 

Union Minister Nirmala Sitharaman in GST Counsil meet

இன்று தலைநகர் டெல்லியில் 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். மத்திய இணை நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மாநில நிதியமைச்சர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது, குறிப்பிட்ட பொருட்கள், சேவைகளுக்கு வரி விதிப்பு, வரி குறைப்பு உள்ளிட்டவைகள் குறித்து நிதியமைச்சர் தலைமையில் , நிதித்துறை அதிகாரிகள், மாநில பிரதிநிதிகள் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை … Read more

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன்.? அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்.!

Pollachi Jayamaran says about Nirmala Sitharaman meeting

பல்வேறு கருத்து மோதல்களை தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலை அடுத்து இனி வரும் தேர்தல்களிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை எனவும் அதிமுக திட்டவட்டமான அறிவித்து இருந்தது. இந்த சமயத்தில் தான், இன்று மத்திய அரசின் மெகா கடன் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள கோவை வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை, அதிமுக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் … Read more

நேற்று டெல்லியில் ஆலோசனை.! இன்று கோவையில் தூய்மை பணி.! நிர்மலா சீதாராமனின் அடுத்தடுத்த நகர்வுகள்.! 

Union Minister Nirmala Sitharaman in Kovai

பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்தை, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்று மத்திய அரசு “தூய்மை பாரதம் (Swachh Bharat)” எனும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தூய்மை பாரத திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவரும் காலை 10 மணி முதல் 11 மணி வரையில் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மை செய்ய வேண்டும் என அறைகூவல் விடுத்து இருந்தார். மேலும், தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி, … Read more

ஜெ.பி.நட்டா, அமித்ஷாவை தொடர்ந்து நிர்மலா சீதாராமனை சந்தித்த அண்ணாமலை..!

Nirmala Sitharaman

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணி வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இதுதொடர்பாக அதிமுக அறிக்கையும் வெளியிட்டது. அதிமுகவின் இந்த முடிவு குறித்து, அண்ணாமலை அவர்கள் பாஜக தேசிய தலைமை இதுகுறித்து பேசும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பாஜக மேலிடத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாஜகவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்து … Read more

மருத்துவ படிப்புகள் தமிழில் இருக்க வேண்டும் – நிதியமைச்சர் நிர்மலா

தமிழில் படித்ததால் தான் ஆழ்ந்த அறிவு கிடைக்கும் என எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நிதியமைச்சர் பேச்சு. சென்னையில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மருத்துவம் தொடர்பான அனைத்து படிப்புகளும் தமிழில் இருக்க வேண்டும். தமிழ்மொழியில் கல்வி கற்றால் தான் ஆழ்ந்த அறிவு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவ படிப்பை முடித்து பட்டம் பெறுவோருக்கு சமூக பொறுப்புணர்வு அவசியம் எனவும் கூறினார்.

அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் 16% அதிகரிப்பு – மத்திய நிதியமைச்சகம்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை காட்டிலும் 16.6% ஜிஎஸ்டி வசூல் அதிகம் என மத்திய நிதியமைச்சகம் தகவல். கடந்த அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 16.6% அதிகரித்து, ரூ.1.52 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை காட்டிலும் 16.6% அதிகம் எனவும் மத்திய நிதியமைச்சகம் தகவல் கூறியுள்ளது. ஜிஎஸ்டி அறிமுகமானத்தில் இருந்து அக்டோபர் மாத வரி வசூல், இரண்டாவது மிக அதிகபட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த … Read more