இங்கிலாந்து டெஸ்ட் தொடர் – இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ!

INDIA TEST TEAM

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்தாண்டு ஜூன் மாதம் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு முன்பாக இந்தியா விளையாடும் கடைசி 20 ஓவர் தொடர் … Read more

IND vs AFG: நாளை முதல் டி20 போட்டி… விராட் கோலியை சந்தித்த பிசிசிஐ!

virat kohli

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற உள்ளது. இந்தாண்டு நடைபெற உள்ள ஐசிசி டி20 உலககோப்பைக்கு முன்னதாக இந்தியா விளையாடும் கடைசி டி20 தொடர் இது என்பதால் முக்கிய வாய்தவையாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டி20 தொடருக்கான அணியில் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி என இருவருமே இடம் பெற்றுள்ளனர். … Read more

இந்தியாவில் நடக்கும் போட்டிகளுக்கு புதிய ஸ்பான்சர்கள் – பிசிசிஐ அறிவிப்பு

Campa and Atomberg

இந்தியாவில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நடத்தும் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்கான புதிய ஸ்பான்சர்களை ஒப்பந்தம் செய்து அறிவித்துள்ளது. அதாவது,  நடப்பாண்டு முதல் 2026ம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெறும் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்கு புதிய ஸ்பான்சர்கள் ஒப்பந்தம் செய்துள்ளது பிசிசிஐ. அதன்படி, புதிய ஸ்பான்சர்களாக ரிலையன்ஸ் குழுமத்தின் கேம்பா (Campa) மற்றும் ஆட்டம்பெர்க் டெக்னாலஜிஸ் (Atomberg Technologies) நிறுவனங்களை பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், கிரிக்கெட் ரசிகர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், இந்திய கிரிக்கெட்டின் … Read more

உலகக்கோப்பைக்கு முன் முத்தரப்பு தொடருக்கு ஒப்புதல் அளித்த பிசிசிஐ..!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை 2024க்கு முன், முத்தரப்பு தொடரில் பங்கேற்க பிசிசிஐ ஒப்புக் கொண்டுள்ளது. இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே இந்த முத்தரப்பு தொடர் நடக்கிறது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள 4 மைதானங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் முத்தரப்பு தொடரும் தென்னாப்பிரிக்காவில் மட்டும் நடைபெற உள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கு முன் இந்த முத்தரப்பு தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். முன்னதாக இந்த முத்தரப்பு தொடரில் இந்தியா … Read more

டெஸ்ட் தொடரில் இஷான் கிஷன் விலகல்.. புதிய வீரரை அறிவித்த பிசிசிஐ.!

இந்திய அணி  தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என சமன் செய்துள்ளார். தற்போது கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இன்று முதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் வரும் 26 முதல் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். … Read more

இது நல்ல முடிவு… தோனியின் 7ம் நம்பருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறித்து ராஜீவ் சுக்லா கருத்து!

Rajeev Shukla

இந்திய கிரிக்கெட்டுக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி செய்துள்ள மிகப்பெரிய பங்களிப்பை கெளரவிக்கும் வகையில், அவரது ஜெர்சி நம்பர் 7-க்கு ஓய்வு அளித்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அறிவித்திருந்தது. இந்திய கிரிக்கெட் வாரியம் 2004ல் தோனி அறிமுகமானதில் இருந்து விளையாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எம்எஸ் தோனி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவரது ஜெர்சி நம்பர் 7க்கும் ஓய்வு அளிக்கவேண்டும் என்றும் அதுதான் … Read more

இந்தியாவில் டி20 தொடரை தொடர்ந்து T10 தொடரை அறிமுகப்படுத்த பிசிசிஐ திட்டம்?

T10 cricket league

இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) உலக நாடுகளை கவர்ந்த மிக பிரபலமான தொடராகும். கால்பந்து தொடருக்கு அடுத்து உலக அளவில் ஐபிஎல் தொடர் மிக வெகுவாக கவரப்பட்ட தொடர் என்றே கூறலாம். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, 17-வது ஐபிஎல் போட்டியை அடுத்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை நடத்த பிசிசிஐ சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வீரர்கள் … Read more

நம்பர் 7க்கு ஓய்வு… எம்.எஸ் தோனியை கெளரவித்த பிசிசிஐ!

Jersey No 7

இந்திய கிரிக்கெட்டுக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி செய்துள்ள பங்களிப்பை கெளரவிக்கும் வகையில், அவரது ஜெர்சி நம்பர் 7-க்கு பிசிசிஐ ஓய்வு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, 1998ம் ஆண்டு முதல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். முதல் முதலில் பீகார் அணிக்காகக் களமிறங்கிய அவர், அடுத்து இந்திய அணியில் இடம் பிடித்து பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இதில் குறிப்பாக, ஐசிசி கோப்பைகள் அனைத்தையும் வென்ற கேப்டன் … Read more

விராட் கோலியின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்.! டி20-ல் புதிய அத்தியாயம்.!

SuryakumarYadav

இந்தியா அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது டி20 போட்டி ஆனது நேற்று க்கெபர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க … Read more

விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நான் நீக்கவில்லை.. இதை மட்டுமே கூறினேன்.. சர்ச்சைக்கு பதில் அளித்த கங்குலி!

virat kohli

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நான் நீக்கவில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி வலம் வந்த சர்ச்சைக்கு பதில் அளித்துள்ளார். எம்எஸ் தோனிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக விராட்கோலி செயல்பட்டு வந்தார். அதுவும், பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றபோது, கோலி கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு … Read more