உலகக்கோப்பையை வெல்லணும்..ஓய்வு பற்றி எண்ணம் இல்லை – ரோஹித் சர்மா ஸ்பீச்!!

rohit sharma speech

Rohit Sharma : உலகக்கோப்பையை வென்று கொடுக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா இந்தியாவுக்காக உலகக்கோப்பையை வென்று கொடுக்கவேண்டும் என்று விரும்புவதால் இப்போதைக்கு ஓய்வு பற்றி எண்ணம் இல்லை என கூறியுள்ளார். கௌரவ் கபூர் எடுத்த நேர்காணலில் பேட்டியளித்த ரோஹித் சர்மா “உண்மையில் நான் இப்போது ஓய்வு பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால், வாழ்கை நம்மளை எப்படி எங்கு அழைத்து செல்கிறது என்பதை பற்றி … Read more

உலகக்கோப்பைக்கு முன் முத்தரப்பு தொடருக்கு ஒப்புதல் அளித்த பிசிசிஐ..!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை 2024க்கு முன், முத்தரப்பு தொடரில் பங்கேற்க பிசிசிஐ ஒப்புக் கொண்டுள்ளது. இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே இந்த முத்தரப்பு தொடர் நடக்கிறது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள 4 மைதானங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் முத்தரப்பு தொடரும் தென்னாப்பிரிக்காவில் மட்டும் நடைபெற உள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கு முன் இந்த முத்தரப்பு தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். முன்னதாக இந்த முத்தரப்பு தொடரில் இந்தியா … Read more

உலகக்கோப்பையை நடத்தும் வாய்ப்பை இலங்கையிடமிருந்து பறித்த ஐசிசி..!

நடந்து முடிந்த உலகக்கோப்பையில் இலங்கை மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் இருந்தது. இலங்கை அணி 9 போட்டிகளில் விளையாடிய போது 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது. 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இந்த உலகக் கோப்பையில் இலங்கை தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இலங்கையை பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தன. நெதர்லாந்து … Read more

உலகக்கோப்பைக்கான பரிசுத் தொகை அறிவிப்பு… தோற்கும் அணிக்கும் பல கோடி..!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், உலகக்கோப்பைக்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி போட்டிக்காக ஒட்டுமொத்தமாக 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி 4 மில்லியன் அமெரிக்க டாலர்களும், தோல்வியடையும் அணி 2 மில்லியன் அமெரிக்க டாலர்களும் பரிசு தொகையாக வழங்கப்படும். உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு 4 மில்லியன் டாலர்கள் என்றால் இந்திய மதிப்பில் சுமார் ரூ.83 கோடி … Read more

ரசிகர்கள் ஆர்பரிப்பில் மேளதாளங்கள் முழங்க அர்ஜென்டினா வீதியில் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு.!

உலகக்கோப்பை வென்று நாடு திரும்பிய அர்ஜென்டினா வீரர்களுக்கு அந்நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.  நடந்து முடிந்த ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் பிரான்ஸ் நாட்டை 4-2 என்கிற பெனால்டி ஷூட் கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. அர்ஜென்டினா மட்டுமல்லாது உலகமெங்கும் உள்ள மெஸ்ஸி ரசிகர்கள், கால்பந்தாட்ட ரசிகர்கள் இன்னும் கொண்டாடி வருகின்றனர். கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி இன்று தங்களது சொந்த நாட்டிற்க்கு சென்றது. அங்கு , உலக … Read more

FIH மகளிர் ஹாக்கி உலக கோப்பை போட்டியில் கால் இறுதிக்கு செல்லுமா இந்திய அணி!

நேற்று(ஜூலை 7) நடந்த FIH மகளிர் ஹாக்கி உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் நியூசிலாந்துக்கு எதிராக 3-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி  தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடத்தில் FIH மகளிர் ஹாக்கி உலக கோப்பை போட்டியின் கால் இறுதிக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டது. இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான பகுதி-பி ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும் கிராஸ்-ஓவர் சுற்றுக்கு முன்னேறியது. இந்த கிராஸ்-ஓவர் சுற்று ஞாயிற்றுக்கிழமை … Read more

#Messi:உலகக் கோப்பைக்கு பிறகு லியோனல் மெஸ்ஸி ஓய்வு ? பயிற்சியாளர் ஸ்கலோனி

லியோனல் மெஸ்ஸியை நாம் இப்போது அவரை ரசிக்க வேண்டும்.ஒருவருக்கு வயதாகிறது, அது சாதாரணமானது என்று நான் நினைக்கிறேன்.என்ன நடக்கப் போகிறது என்று நினைப்பது வீண்-லியோனல் ஸ்கலோனி. அர்ஜென்டினா கால்பந்து ரசிகர்கள் தங்களால் இயன்ற வரையில் லியோனல் மெஸ்ஸியை ரசிக்க வேண்டும்,அவர்  ஏழு முறை பலோன் டி’ஓர் வென்றவர், இந்த ஆண்டு கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவாரா என்று கவலைப்படுவதை நிறுத்துங்கள் என்று பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி கூறினார். “நாம் இப்போது … Read more

டி-20 உலகக் கோப்பை போட்டி;இந்தியா VS பாகிஸ்தான்…… 2 வீரர்களுக்கு மிக முக்கியப் பங்கு – கம்பீர் ஆலோசனை!

பாகிஸ்தானுக்கு எதிரான டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு வீரர்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று கம்பீர் ஆலோசனை கூறியுள்ளார். இந்தியாவில் நடைபெறவிருந்த டி-20 உலகக் கோப்பை போட்டியானது கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.அதன்படி,அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கும் டி-20 உலகக் கோப்பை போட்டியானது,நவம்பர் 14 ஆம் தேதி  நிறைவடைகிறது. இதன்காரணமாக,கடந்த ஜூலை 16 ஆம் தேதியன்று டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் … Read more

50 ஓவர் உலகக் கோப்பை போட்டி.. இந்தியாவில் நடைபெறும் ஐசிசி அறிவிப்பு ..!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை மிரட்டி வருகிறது.இந்நிலையில், அனைத்து விதமான விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும் சில போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் வருகிறது. ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 18-ஆம் தேதி முதல் நவம்பர் 15-ஆம் தேதி வரை 7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி  நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், ஆஸ்திரேலியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால், 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடத்துவது சாத்தியல்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் … Read more

நயன்தாரா திருமணம் நடக்குமா?! உலகக்கோப்பை ஜோதிடரின் வாக்கு பழிக்குமா?!

‘உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்தியா தோற்கும். இதற்க்கு முன்னர் கோப்பையை வெல்லாத அணி கோப்பையை வெல்லும். அதுவும் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சனுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.’ இப்படி ஒரு கூற்றை உலகக்கோப்பை போட்டி நடைபெறுவதற்கு சொல்லி போட்டி முடிந்த பிறகு தமிழகம் முழுதும் பிரபலாமானவர் ஜோசியர் பாலாஜி ஹாசன். இவர் உலகக்கோப்பை பற்றி சொன்னது பெரும்பாலான உண்மை இருந்தது.  அதே போல நயன்தாரா திருமணம் பற்றி கூறினார். அதாவது அவரது திருமணம் இந்த வருடத்திற்குள் … Read more