அரியர் மாணவர்களுக்கு நற்செய்தி! மீண்டும் ஓர் வாய்ப்பளித்த அண்ணா பல்கலைகழகம்.!

அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.  2001-02 முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  அதன்படி, 2001-02 கல்வியாண்டின் மூன்றாவது செமஸ்டரிலிருந்தும், 2002-03 கல்வியாண்டின் முதல் செமஸ்டரிலிருந்து, இறுதி செமஸ்டர் வரை அரியர் வைத்தவர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மூன்றாவது செமஸ்டர் தொடங்கி அரியர் வைத்திருந்தால் நடைபெறவுள்ள தேர்வில் பகிர்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரியர் எழுதவுள்ள … Read more

பொறியியல் மாணவர்களே ரெடியா? – அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!

பொறியியல் கல்லூரிகளுக்கு டிச.8 முதல் செமஸ்டர் தொடங்குகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு டிசம்பர் 8-ஆம் தேதி முதல் செமஸ்டர் தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் தமிழை அழித்திருப்பார்கள் – அமைச்சர் பொன்முடி

விருப்பப்படுவோர் இந்தியை கற்கலாம் என பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேச்சு. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கான பட்டமளிப்பு விழா விழுப்புரம் சட்டக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் படிப்பவர்கள் கண்டிப்பாக தமிழ் படிக்க வேண்டும் என்பதால் வருகின்ற ஆண்டில் இருந்து முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்கள் கட்டாயம் தமிழ் மொழி படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் எப்பொழுதோ … Read more

திருக்குறள் ஆன்மிகம் கற்பிக்கிறது, ஆனால் இதை யாரும் பேசுவதில்லை – தமிழக ஆளுநர்

திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் பயன்படுத்துகின்றனர் என திருக்குறள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திருக்குறளை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாகவே காட்ட நினைக்கின்றனர். ஆனால், அது கற்பிக்கும் ஆன்மிகம் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆன்மிகம், நீதி சாஸ்திரம் குறித்து திருக்குறள் பேசுகிறது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யூ.போப் வேண்டுமென்றே இதனை மாற்றி மொழிபெயர்த்துள்ளார். ஆதிபகவன் என்றால் முதன்மை கடவுள் என … Read more

நாளை முதல் 5-ம் தேதி வரை தொடர் விடுமுறை – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

ஆயுதபூஜையை முன்னிட்டு பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை முதல் 5-ம் தேதி வரை விடுமுறை அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம்.  சரஸ்வதி பூஜை, விஜயதசமியையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை முதல் 5-ம் தேதி வரை 5 நாட்களுக்கு தொடர் விடுமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அக்.3-ம் தேதிக்கு பதில் 8-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

பேராசிரியர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடாது – தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவு

பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை கைப்பற்றக்கூடாது என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவு. பேராசிரியர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடாது என மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. மன அழுத்தத்தில் உள்ள பேராசிரியர்களுக்கு யோகா பயிற்சி தர வேண்டும் என்றும் பேராசிரியர்களின் தேர்வு, நியமனம், ஊதியம் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை எக்காரணம் கொண்டும் கைப்பற்றக்கூடாது. … Read more

புதிய பாடத்திட்டம் – வரும் 17-ம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

புதிய பாடத்திட்டத்தை இறுதி செய்வது தொடர்பாக வரும் 17-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை. பொறியியல் பாடத் திட்டங்கள் நடப்பாண்டில் மாற்றி அமைக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டங்களை வகுத்துள்ளது. முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு வரை அனைத்து மாணவர்களுக்கும் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. மாற்றிஅமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டங்கள் வரும் 18-ம் தேதி வெளியாகவுள்ளது என்றும் இதற்கு முன்னதாக கல்வி மானியக் குழுவில் ஒப்புதல் பெற … Read more

பொறியியல் கலந்தாய்வு வரும் 25ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிப்பு!

பொறியியல் கலந்தாய்வு 25ஆம் தேதி முதல் தொடங்குகிறது அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கலந்தாய்வு தொடங்கும் தேதி தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. நீட் தேர்வு முடிவு வெளியான பின் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டது. விரைவில் புதிய பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியாகும் என தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வு வரும் 25ம் … Read more

பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 18-ம் தேதி வெளியீடு – அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 18-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.  அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய ஏற்கனவே முடிவு செய்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளதாக அறிவித்திருந்தது. மேலும், நடப்பாண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில்  மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பொறியியல் பாடத்திட்டம் வரும் 18ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், புதிய பாடத்திட்டத்திற்கு வரும் … Read more

பட்டமளிப்பு விழா மேடையிலும் அரசியல் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம்

எண்ணிக்கையில் மட்டுமே கவனம் செலுத்தாமல் தரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம். அண்ணா பட்டமளிப்பு விழா மேடையிலும் அரசியல் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சில கருத்துக்களை முன்வைத்தார். அதை தெளிவுபடுத்த வேண்டியது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கடமையாக கருதுகிறோம். தமிழகத்தில் உயர்கல்வி … Read more