பேராசிரியர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடாது – தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவு

பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை கைப்பற்றக்கூடாது என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவு. பேராசிரியர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடாது என மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. மன அழுத்தத்தில் உள்ள பேராசிரியர்களுக்கு யோகா பயிற்சி தர வேண்டும் என்றும் பேராசிரியர்களின் தேர்வு, நியமனம், ஊதியம் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை எக்காரணம் கொண்டும் கைப்பற்றக்கூடாது. … Read more