ஆன்மிகம் என்பதை புரிந்து கொள்வதில் ஆளுநருக்கு சற்று சிரமம் இருக்கும் என்று கருதுகிறேன் – கே.எஸ்.அழகிரி

ஆன்மிகம் என்பதை புரிந்து கொள்வதில் ஆளுநருக்கு சற்று சிரமம் இருக்கும் என்று கருதுகிறேன் என கே.எஸ்.அழகிரி ட்வீட்.  சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி நமது ஆன்மிகத்தின் ஆதாரம் திருக்குறள் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஆளுநரின் கருத்து குறித்து கே.எஸ்.அழகிரி ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ஆளுநர் அவர்கள் ஒவ்வொரு குறளையும் படித்து அதனுடைய பொருளை புரிந்து கொள்ள முயற்ச்சித்து வருவது வரவேற்க்கத்தக்கது. ஆன்மிகம் என்பதை புரிந்து கொள்வதில் ஆளுநருக்கு சற்று … Read more

திருக்குறள் ஆன்மிகம் கற்பிக்கிறது, ஆனால் இதை யாரும் பேசுவதில்லை – தமிழக ஆளுநர்

திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் பயன்படுத்துகின்றனர் என திருக்குறள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திருக்குறளை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாகவே காட்ட நினைக்கின்றனர். ஆனால், அது கற்பிக்கும் ஆன்மிகம் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆன்மிகம், நீதி சாஸ்திரம் குறித்து திருக்குறள் பேசுகிறது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யூ.போப் வேண்டுமென்றே இதனை மாற்றி மொழிபெயர்த்துள்ளார். ஆதிபகவன் என்றால் முதன்மை கடவுள் என … Read more

ஜூன் மாதத்தில் 12 மொழிகளில் வெளியாகிறது திருக்குறள்.!

ஜூன் மாதத்தில் ஹிந்தி உட்பட 12 மொழிகளில் திருக்குறள் வெளியாகும் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அறிவிப்பு. ஜூன் மாதத்தில் 12 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்படும் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குனர் சந்திரசேகர் கூறுகையில், திருக்குறளை மொழிப்பெயர்க்கும் பணிகள் முடிவடைந்து அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், வரும் ஜூன் மாதத்தில் 12 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்படும் என கூறினார். அதன்படி, ஹிந்தி, சமஸ்கிருதம், மராத்தி, ஓடியா, நேபாளி, … Read more

டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டம் – மீண்டும் திருக்குறள் சேர்ப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு பாடத்திட்டத்தில் மீண்டும் திருக்குறளை சேர்த்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி (TNPSC) அறிவிக்கை செய்யப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழித்தாள் கட்டாயமாக்கப்பட்டு,தமிழ் மொழியில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்த நிலையில், அதன் அடிப்படையிலான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் TNPSC இணையதளத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இவ்வாறு இருக்க,டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட குரூப் 2 (Group II Main) பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் … Read more

வ.உ.சிதம்பரனரின் 150ஆவது நினைவு நாள் : வ.உ.சி பன்னூல் திரட்டு, திருக்குறள் உரை வெளியீடு!

வ.உ.சிதம்பரனரின் 150 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, வ.உ.சி பன்னூல் திரட்டு, திருக்குறள் உரை ஆகிய நூல்களை முதல்வர் வெளியிட்டுள்ளார்.  இன்று கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் 85-து நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. எனவே இன்று காலை சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள வ உ சிதம்பரனார் முழு உருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னதாக சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் விடுதலைப் போராட்ட வீரர் … Read more

அரசு பேருந்துகளில் திருக்குறள் பலகை.., 10 நாட்களுக்குள் முடிக்கப்படும்- அமைச்சர் ராஜகண்ணப்பன்..!

அரசு பேருந்துகளில் திருக்குறள், உரையுடன் அமைக்கும் பணிகள் 10 நாட்களுக்குள் முடிவடையும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 7291 சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 702 குளிர்சாதன பேருந்துகள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் 1400 பேருந்துகளை தவிர மற்ற பேருந்துகள் அனைத்தும் இயக்கபப்டுகிறது என  போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். டீசல் பேருந்துகளை விட 5 மடங்கு விலை அதிகமாக மின் பேருந்துகள் இருந்தாலும், அதன் பராமரிப்பு, டீசல் செலவு … Read more

திருக்குறள் குறித்து பிரதமர் கூறியதால் தமிழுக்கே பெருமை- முதல்வர் பழனிச்சாமி!

பிரதமர் மோடி, திருக்குறள் குறித்து கூறியதால், தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்ப்பதாகும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, இன்று மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். அதில் அவர் திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷம் என தெரிவித்த அவர், தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. என தெரிவித்தார். மேலும், இந்தியாவில் உள்ள … Read more

இந்தியா-சீனா பதற்றம்: லடாக் எல்லையில் திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி!

லடாக்கில் ஆய்வுகளை மேற்கொண்ட பிரதமர் மோடி, “மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்” என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி உரையாற்றினார். லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே பதற்றத்தை நிலவி உள்ள நிலையில், திடீரென பிரதமர் மோடி லடாக் சென்று அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அங்கு முப்படைகளின் தலைமை தளபதிகளுடன் பிரதமருடன் மோடி உரையாற்றினார். அப்போது அவர், “மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்…” என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி உரையாற்றினார். படைமாட்சி எனும் அதிகாரத்தில், குறள் எண் 766-ல் இந்த குறள் இடம்பெற்றுள்ளது. … Read more

தேனீ அருகே திருக்குறள் வழியில் திருமணம் செய்து கொண்ட மணமக்கள்!!

திருமண நிகழ்ச்சிகள் இப்போது மக்களைக் கவரும் விதத்தில் வித்தியாசமான முறைகளில் நடக்கின்றன. அழைப்பிதழில் இருந்து- மணமக்கள் உடுத்தும் ஆடை, மேடை அலங்காரம், ஊர்வலம், உணவு எல்லாமுமே காலத்துக்கு தக்கபடியான மாற்றங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு முக்கிய விஷயம், திருமண முறையே மாறி புதுமைபடைத்துக்கொண்டிருக்கிறது. மணமக்களின் குடும்பத்தினர் தங்களுக்கு பிடித்ததுபோல் திருமண முறைகளை தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியோடு மணவிழாவை நடத்தி இல்லறத்தில் இணைகிறார்கள். அந்த வகையில் மக்களை கருத்துடனும், களிப்புடனும் ஈர்த்துக்கொண்டிருக்கிறது, திருக்குறள் வழி திருமணங்கள். தேனி அருகே … Read more