தெலுங்கானா தேர்தல் : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி.!

PM Modi visited Tirupati temple

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இம்மாதம் அறிவிக்கப்பட்டு இருந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சத்தீஸ்கர், மிசோராம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல நிறைவு பெற்றன. இதனை அடுத்து வரும் 30ஆம் தேதி தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 199 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் டிசம்பர் 3ஆம் … Read more

திருப்பதி பக்தர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் அவசியம்.!

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருப்பதியில் சிறப்பு தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் பக்கதர்களுக்கு புதிய கட்டுப்பாடு. திருப்பதியில் வரும் ஜனவரி 1 முதல் 11-ஆம் தேதி வரை சிறப்பு தரிசனம் செய்ய முன்பதிவு செய்வோருக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ரூ.300 டிக்கெட் பெரும் பக்தர்கள் தடுப்பூசி சான்றிதழ் கொடுப்பது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை தரிசனத்துக்கு வரும்போது தரவேண்டும் … Read more

திருப்பதியில் மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினிகாந்த் சாமி தரிசனம்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடினார். ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, ஆன்மீகத்தின் மீது ஈர்ப்பு கொண்ட ரஜினிகாந்த் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று இரவு வந்துள்ளார். ரஜினிகாந்துடன் அவருடைய மகள் ஐஸ்வர்யாவும் வந்திருந்தார். திருமலையில் உள்ள டி.எஸ் ஆர் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கிய இவர், இன்று அதிகாலை மகளுடன் கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவை … Read more

பென்ஸ் கார் மீது மோதியதில் இரண்டு துண்டுகளாக உடைந்த டிரக்டர்..வைரலாகும் வீடியோ!

ஆந்திராவில் மெர்சிடிஸ் மீது டிராக்டர் மோதியத்தில் 2 துண்டுகளாக உடைந்தது. வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படங்கள்! ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே வேகமாக வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் மீது மோதியதில் டிராக்டர் இரண்டு பகுதிகளாக உடைந்தது. விபத்துக்குள்ளான கார் மற்றும் டிராக்டரின், புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களை வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், டிராக்டர் இரண்டு துண்டுகளாக உடைந்து கிடப்பதும், பென்ஸ் காரின் முன்பகுதி சேதமடைந்திருப்பதும் பதிவாகியுள்ளது. மேலும், டிராக்டரை ஓட்டி வந்த … Read more

இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் விழா..!

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்.  திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முதல்நாளான இன்று மாலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் பிரமோற்சவ கொடியேற்றம் நடைபெறும். இன்று முதல் முதல் 9 நாட்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி பல்வேறு வாகனங்களில் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இன்று இரவு பெரிய சேஷவாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வலம் வருகிறார். 9ம் … Read more

இபிஎஸ் நாளை திருப்பதி பயணம்.! நாளை காலை ஏழுமலையான் தரிசனம்.!

எடப்பாடி பழனிச்சாமி திருப்பதி செல்ல உள்ளார். நாளை காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.  அதிமுக கட்சி பிரச்சனை தான் தற்போது தமிழகத்தில் பரபரப்பாக இருக்கும் நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கிறது. இதில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு பிரிவுகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது நடைபெற்று வருகிறது. தற்போதைய நீதிமன்ற தீர்ப்பின் படி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தான் இருக்கிறார். நேற்று தான் அதிமுக கட்சி … Read more

சூரிய, சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் இரண்டு நாட்கள் மூடப்படும்..

சூரிய மற்றும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் மற்றும் நாடு முழுவதும் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் 60 கோவில்கள் பக்தர்கள் வழிபாட்டிற்காக அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 8 ஆகிய தேதிகளில் மூடப்படும். அக்டோபர் 25 ஆம் மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. எனவே அக்டோபர் 25-ந்தேதி 9 மணிநேரத்துக்கு முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் காலை 8.11 மணியில் … Read more

திருப்பதி அருகே நிலநடுக்கம்..! அளவுகோலில் 3.6 ஆக பதிவு..!

திருப்பதி அருகில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருப்பதியில் இருந்து 85 கி.மீ. வடகிழக்கில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.

திருப்பதி கோவிலில் தரிசனம்:இன்று முதல் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு!லிங்க் இதோ!

ஆந்திரா:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத் தரிசனத்திற்கு ரூ.300 டிக்கெட்டிற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று காலை 9 மணி முதல் தொடங்கப்படவுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.அதன்படி, சிறப்பு தரிசனத்திற்கு ரூ.300-க்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 9 மணி முதல் தொடங்குகிறது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  அதன்படி,தினமும் 20 ஆயிரம் வீதம் மொத்தம் 6 லட்சத்து 20 ஆயிரம்(ரூ.300-க்கான) தரிசன டிக்கெட்டுகளை விற்க தேவஸ்தானம் … Read more

#Breaking:சென்னையிலிருந்து ஆந்திரா சென்றவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி!

ஆந்திரா:சென்னையிலிருந்து திருப்பதிக்கு சென்ற 39 வயது பெண்ணுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கென்யாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து,அங்கிருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்ற 39 வயது பெண்ணுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும்,அப்பெண்ணின் குடும்பத்தினர் 6 பேருக்கு எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் சோதனையில் கொரோனா நெகட்டிவ் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்,ஆந்திரா மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.