சேலம் : கந்துவட்டி கொடுமை.! ஊரே ஒன்றுகூடி கலெக்டர் அலுவலகம் சென்றதால் பரபரப்பு.! 

கந்துவட்டிக்கு பணம் கொடுப்பது சட்டப்படி குற்றம் என்றாலும், ஆங்காங்கே அதன் கொடுமைகளை மக்கள் அனுபவித்து தான் வருகின்றனர். அப்படியான சம்பவங்கள் பூதாகரமாக வெளிவரும்போது தான் வெளியுலகிற்கு தெரியவருகிறது. அப்படித்தான் சேலம் மாவட்டம் டி.பெருமாபாளையம் எனும் ஊரில் இருந்த கந்துவட்டி கொடுமை வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது. டி.பெருமாபாளையம் ஊரை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரும் அவரது குடும்பத்தாரும் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வசூலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து அதே ஊரை சேர்ந்த ரவீந்தரின் என்பவர் தட்டிக்கேட்டதால், … Read more

யூ-டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்.! என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை.!

யூ-டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக்க சேலம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகியோர் தங்கியிருந்த வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, போலீசார் வாகனசோதையில் ஈடுபட்டபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த சேலத்தை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகியோரை சோதனை செய்ததில், அவர்களிடம் துப்பாக்கி, கத்தி, முகமூடி போன்ற ஆயுதங்கள் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்களை விசாரிக்கையில், சேலம் … Read more

அரசு கல்லூரி அருகே டாஸ்மாக்.! 200க்கும் மேற்பட்ட பாமகவினர் போராட்டம்.!

சேலம் மாவட்டம் , சென்னிமலையில் அரசு கல்லூரிக்கு அருகே உள்ளே மதுபான கடையினை அகற்ற கோரி, பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் .  சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சென்னிமலை எனும் இடத்தில் அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரிக்கு அருகே செல்லும் வழியில் அரசு மதுபான கடை உள்ளது. கல்லூரி அருகே டாஸ்மாக் மதுபான கடை இருப்பதால் மாணவர்கள் நலன் பாதிக்கப்படும் என்பதால் அந்த மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என பாமகவினர் … Read more

பைக்கில் செல்போன் பேசியவரை நிறுத்தியதால் வந்த வினை.! போக்குவரத்து காவலர் மீது தாக்குதல்.!

சேலம் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் பாண்டியனை, கோகுல் ராஜ் என்பவர் தாக்கிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விதிகளை பின்பற்ற சொல்லி தனது வேலையை செய்து வந்த சேலம் மாநகரில் போக்குவரத்து காவலரை ஒருவர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பகுதியில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் போக்குவரத்து காவலர் பாண்டியன் என்பவர் ஈடுபட்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக செல்போன் பேசிக்கொண்டே கோகுலராஜ் என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. … Read more

கஞ்சா டோர் டெலிவரி.! ஆட்டம் காட்டிய அதிமுக பிரமுகர்.! மடக்கி பிடித்த காவல்துறை.!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே இருசக்கர வாகனம் மூலம் கஞ்சா டோர் டெலிவரி செய்த அதிமுக பிரமுகரை போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்துள்ளனர்.  தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகமாகி கொண்டே போவதால், நாளைய இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனை தடுக்க பல்வேரு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதனால், ஆபரேஷன் கஞ்சா எனும் அதிரடி நடவடிக்கை மூலம் தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் அவ்வப்போது கிலோ கணக்கில் கஞ்சா பல்வேறு … Read more

‘அம்மா மினி கிளினிக்’ பெயர் மாற்றம்;இடம் பெற்ற முதல்வர் படம் – ஓபிஎஸ் கடும் கண்டனம்!

சேலம் மாவட்டத்தில் ‘அம்மா மினி கிளினிக்’ என்ற பெயர் பலகை ‘முதலமைச்சரின் மினி கிளினிக்’ என்று மாற்றப்பட்டதற்கு யார் காரணம்? நிதி எங்கிருந்து வந்தது? என்று ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் மாவட்டம், நவப்பட்டி ஊராட்சி, பொது சேவை மையத்தில் இயங்கும் ‘அம்மா மினி கிளினிக்’ என்ற பெயர்ப் பலகையை எடுத்துவிட்டு, ‘முதலமைச்சரின் மினி கிளினிக்’ என்ற பெயர்ப் பலகை மாற்றப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: ‘மாற்றத்தைத் தருவோம்’ … Read more

பரபரப்பு…கேஸ் சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் தரைமட்டம்;ஒருவர் பலி,6 பேர் படுகாயம்!

சேலம்:கருங்கல்பட்டியில் வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 வீடுகள் தரைமட்டமாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  சேலம் கருங்கல்பட்டியில்,பாண்டு ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் இன்று காலை வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.இதனால்,4 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானதாகவும்,6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஒரு குழந்தை மற்றும் பத்மநாபன் உள்ளிட்ட 5 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர்,காவல்துறையினர்  மற்றும் அப்பகுதியில் உள்ள மக்கள் … Read more

தமிழ்நாடு கொடி – சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

சேலத்தில் தமிழ்நாடு கொடி என்று கூறி ஒரு கொடியை ஏற்றியதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான் தமிழ்நாடு கொடி என்று கூறி ஒரு கொடியை ஏற்றியுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி … Read more

நாளை தனி விமானம் மூலம் சேலம் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை காலை 9 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் காமலாபுரம் விமான நிலையம் செல்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை காலை 9 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் காமலாபுரம் விமான நிலையம் செல்கிறார்.  அங்கிருந்து வாழப்பாடி செல்லும் அவர் அரசு பள்ளியில் காலை 10 மணிக்கு நடக்கும் விழாவில் வருமுன் காப்போம் திட்டத்தை தொடர்ந்து தொடங்கி வைக்கிறார். அதனைத்தொடர்ந்து ஆத்தூருக்கு … Read more

அச்சப்பட வேண்டாம்…சிறுமிக்கு ஆறுதல் அளித்த முதல்வர் ஸ்டாலின் …!

சேலத்தில் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த ஜனனி சிறுமிக்கு முதல்வர் ஸ்டாலின் அலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறியுள்ளார். சேலம்,அரிசிப்பளையம் பகுதியை சேர்ந்த விஜயக்குமார்-ராஜலட்சுமி தம்பதியின் மகளான ஜனனி என்ற 14 வயது சிறுமி,சிலம்பம்,வில்வித்தை, ஸ்கேட்டிங் போன்ற போட்டிகளில் மாநில அளவில் பரிசுகளை வென்றுள்ளார். இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இச்சிறுமிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளன.தந்தை கைவிட்ட நிலையில்,தாயின் உதவியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்து வருகிறார். இதனால்,போதிய வருமானம் இல்லாததால்,முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உதவிடுமாறு பாதிக்கப்பட்ட … Read more