பரபரப்பு…கேஸ் சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் தரைமட்டம்;ஒருவர் பலி,6 பேர் படுகாயம்!

சேலம்:கருங்கல்பட்டியில் வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 வீடுகள் தரைமட்டமாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சேலம் கருங்கல்பட்டியில்,பாண்டு ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் இன்று காலை வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.இதனால்,4 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானதாகவும்,6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஒரு குழந்தை மற்றும் பத்மநாபன் உள்ளிட்ட 5 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர்,காவல்துறையினர்  மற்றும் அப்பகுதியில் உள்ள மக்கள் தீவிரமாக தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தீயணைப்புத்துறை ஊழியர் பத்மநாபன் என்பவரது வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.