யூ-டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்.! என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை.!

யூ-டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக்க சேலம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகியோர் தங்கியிருந்த வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, போலீசார் வாகனசோதையில் ஈடுபட்டபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த சேலத்தை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகியோரை சோதனை செய்ததில், அவர்களிடம் துப்பாக்கி, கத்தி, முகமூடி போன்ற ஆயுதங்கள் இருந்துள்ளது.

இதனை தொடர்ந்து அவர்களை விசாரிக்கையில், சேலம் செட்டிச்சாவடி அருகே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தது அங்கு யூ-டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததும் தெரியவந்துள்ளது.

சேலம் ஊத்துமலை கல்குவாரியில் இருந்து வரும் லாரிகளில் வெடிகுண்டு வைக்க திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நாட்டில் நடக்கும் தவறுகளை தட்டிக்கேட்க புரட்சியாளர்களாக மாற இருந்ததாகவும், தங்களுக்கு கபிலன் என்பவர் உதவியதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து கபிலனையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர் தற்போது அவர்கள் மூவரும், சேலம் மத்திய சிறையில் இருக்கின்றனர்.

இந்நிலையில், அந்த மூவருக்கும் வேறு எதுவும் தீவிர அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா என தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ , அந்த மூவரும் வாடகை கொடுத்து தங்கியிருந்த வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment