பருவமழை – மின்வாரிய அலுவலகத்தில் வரும் 10ம் தேதி ஆய்வுக்கூட்டம் : அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வரும் 10-ஆம் தேதி ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு. 

சென்னை தலைமை செயலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வரும் 10-ஆம் தேதி ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழக முழுவதும் உள்ள மின்வாரிய அதிகாரிகள் காணொளி காட்சி வாயிலாகவும், சென்னையில் இருப்பவர்கள் நேரடியாகவும் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை வரும் 20-ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலந்து ஆலோசிக்கப்பட உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment