சேலம் : கந்துவட்டி கொடுமை.! ஊரே ஒன்றுகூடி கலெக்டர் அலுவலகம் சென்றதால் பரபரப்பு.! 

கந்துவட்டிக்கு பணம் கொடுப்பது சட்டப்படி குற்றம் என்றாலும், ஆங்காங்கே அதன் கொடுமைகளை மக்கள் அனுபவித்து தான் வருகின்றனர். அப்படியான சம்பவங்கள் பூதாகரமாக வெளிவரும்போது தான் வெளியுலகிற்கு தெரியவருகிறது. அப்படித்தான் சேலம் மாவட்டம் டி.பெருமாபாளையம் எனும் ஊரில் இருந்த கந்துவட்டி கொடுமை வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது. டி.பெருமாபாளையம் ஊரை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரும் அவரது குடும்பத்தாரும் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வசூலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து அதே ஊரை சேர்ந்த ரவீந்தரின் என்பவர் தட்டிக்கேட்டதால், … Read more

கந்துவட்டி, மீட்டர் வட்டி – ஒரே வாரத்தில் 124 புகார்கள் : டிஜிபி

தமிழகத்தில் ஒருவாரத்தில் 124 கந்துவட்டி, மீட்டர் வட்டி தொடர்பான புகார் மனுக்கள் பெறப்பட்டன. கடந்த சில காலமாக கந்து வட்டி பிரச்சனையால் தற்கொலை செய்துகொள்வோர் எண்ணிக்கை பெருகி வரும் நிலையில், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பலரும் அறிவுறுத்தி வந்தனர். இந்த நிலையில், இதனை தடுக்க காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் ஒருவாரத்தில் 124 கந்துவட்டி, மீட்டர் வட்டி தொடர்பான புகார் மனுக்கள் பெறப்பட்டன. மேலும், 89 புகார் மனுக்கள் மீது முதல் … Read more

ஆயுதப்படை காவலர் தற்கொலை – கந்துவட்டி அனிதா கைது..!

கந்துவட்டி  பிரச்சனையால் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கந்துவட்டி அனிதா கைது. கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை செல்வகுமார். இவர் கடந்த 1-ஆம் தேதி கந்துவட்டி பிரச்னை காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து இவர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், செல்வகுமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவலர் செல்வகுமாருக்குரூ.5 லட்சம் வழங்கிய நிலையில்,ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டியதால் தற்கொலை செய்து … Read more