ஆயுதப்படை காவலர் தற்கொலை – கந்துவட்டி அனிதா கைது..!

கந்துவட்டி  பிரச்சனையால் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கந்துவட்டி அனிதா கைது.

கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை செல்வகுமார். இவர் கடந்த 1-ஆம் தேதி கந்துவட்டி பிரச்னை காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து இவர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், செல்வகுமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவலர் செல்வகுமாருக்குரூ.5 லட்சம் வழங்கிய நிலையில்,ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக காவலரின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, காவலர் தற்கொலை செய்த விவகாரத்தில் கந்துவட்டி அனிதா கைது செய்யப்பட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment