இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை..! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1037ஆம் ஆண்டு சதய விழாவை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை.  தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1037ஆம் ஆண்டு சதய விழா நேற்று தொடங்கியது. இந்த விழாவில், முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில், நாளை கவியரங்கம், கருத்தரங்கம், பரதநாட்டிய நிகழ்வு போன்றவை நடைபெறவுள்ளது. இதனையடுத்து, நாளை தஞ்சையில் உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக தஞ்சை ஆட்சியர் … Read more

ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை எல்லாம் கிடையாது.! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு.!

ஓணம் பண்டிகை உள்ளூர் விடுமுறை நாளை செங்கல் பட்டு மாவட்டத்திற்கு கிடையாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  நாளை கேரளா முழுவதும் ஓணம் பண்டிகை கோலாகமலாக கொண்டாடப்பட உள்ளது. நாளை கேரளா முழுவதும் பொது விடுமுறை. அது போல, கேரளா எல்லையில் உள்ள தமிழக ஊர்களிலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இது குறித்து, இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாளை ஓணம் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு … Read more

நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழா.! உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.!

நத்தம் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாளை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.   திண்டுக்கல்லில் புகழ் பெற்ற நத்தம் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழா தொடங்கி இன்று தீர்த்தங்கள் கொண்டுவரும் நிகழ்வு நடந்து முடிந்துள்ளது. இதில் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டனர். நாளை குடமுழுக்கு (கும்பாபிஷேசகம்) திருவிழா நடைபெற உள்ளது . இதனை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நாளை (07-09-2022) உள்ளூர் … Read more

சேலத்தில் ஆகஸ்ட்10 உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சேலத்தில் ஆடித் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. சேலம், கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் அறிவித்துள்ளார். சேலத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சேலம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்வார்கள். இந்தாண்டுக்கான ஆடி திருவிழா வருகிற … Read more

#JustNow: 26ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அரியலூரில் 26-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் ஆடி திருவாதிரையான வரும் 26-ஆம் தேதி மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி அறிவித்துள்ளார்.

குஷியோ குஷி…இன்று கல்வி நிறுவனங்கள்,அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் இன்று(ஜூலை 6 ஆம் தேதி) நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு,கல்வி நிறுவனங்கள் மற்றும் மாவட்ட அரசு அலுவலங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.எனினும்,அவசர கால பணிகளுக்காக மட்டும் மாவட்டத்தில் உள்ள தலைமை அலுவலகம் வழக்கம் போல இயங்கும். மேலும்,இன்றைய உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வருகின்ற ஜூலை 23 ஆம் தேதியன்று சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலின் கும்பாபிசேகமானது … Read more

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் வரும்  6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இதனையடுத்து அன்று மாவட்ட அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கும்பாபிசேகமானது 418 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

மே-20-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – நீலகிரி ஆட்சியர்

மே-20-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை  அறிவித்த நீலகிரி ஆட்சியர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா செல்வது உண்டு. இதனால் ஆண்டுதோறும் இந்த நாட்களில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஊட்டி மலர் கண்காட்சி 20-ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது இந்த … Read more

நாளை உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தேனியில் மங்களதேவி கண்ணகி கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை. இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று தமிழகம் மற்றும் கேரள பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக தமிழகம் மற்றும் கேரள பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், நாளை நடைபெறும் பாரம்பரிய வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா அன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளுர் … Read more

#BREAKING : மதுரை மாவட்டத்திற்கு ஏப்.16-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…! எதற்காக தெரியுமா…?

ஏப்.16-ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.  மதுரையில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், ஏப்.16-ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அன்று மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஏப்-16ல் கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள் குறைந்த அளவு ஊழியர்களுடன் … Read more