நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழா.! உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.!

நத்தம் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாளை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  

திண்டுக்கல்லில் புகழ் பெற்ற நத்தம் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழா தொடங்கி இன்று தீர்த்தங்கள் கொண்டுவரும் நிகழ்வு நடந்து முடிந்துள்ளது.

இதில் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டனர். நாளை குடமுழுக்கு (கும்பாபிஷேசகம்) திருவிழா நடைபெற உள்ளது . இதனை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நாளை (07-09-2022) உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

உள்ளூர் விடுமுறை காரணமாக அக்டோபர் 1ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment