#BREAKING : மதுரை மாவட்டத்திற்கு ஏப்.16-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…! எதற்காக தெரியுமா…?

ஏப்.16-ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். 

மதுரையில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், ஏப்.16-ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அன்று மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஏப்-16ல் கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள் குறைந்த அளவு ஊழியர்களுடன் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.