2 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு ..!

Supreme Court

திண்டுக்கல் மருத்துவரை மிரட்டி 20 லட்சம் பறித்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கடந்த டிசம்பர் மாதம் 1-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால்  கைது செய்யப்பட்டார். அங்கித் திவாரிக்கு எதிரான லஞ்ச வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் 2 வாரத்தில் பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக … Read more

கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கு..அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை..!

உத்திரபிரதேசத்தில் உள்ள ஷாஹி இத்கா மசூதி,  ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோவில் வளாகத்திற்கு அருகில் உள்ளது. 1670ல் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில்  மதுராவில் உள்ள கேசவ்தேவ் கோவில் இடித்து “ஷாஹி இத்கா மசூதி” கட்டப்பட்டதாக இந்து தரப்பில் கூறப்படுகிறது. மொத்தம் உள்ள 13.37 ஏக்கர் நிலத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோயில் 11 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது. 2.37 ஏக்கர் பரப்பளவில் ஷாஹி இத்கா மசூதி கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், 13.37 ஏக்கர் மொத்த நிலமும் கிருஷ்ண ஜென்மபூமிக்கு சொந்தமானதுதான் … Read more

திருமணமாகாத பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

பெண் திருமணமாகாததால் கருக்கலைப்பை மறுக்க முடியாது என ஒருமித்த உறவில் இருந்த 25 வயது பெண்ணின் 24 வார கர்ப்பத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்ய காந்த், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், “ஒரு பெண்ணின் இனப்பெருக்கத் தேர்வு அவருக்கான  உரிமையானது, அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் அவரது தனிப்பட்ட சுதந்திரத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும். “திருமணமாகாத பெண்ணுக்கு பாதுகாப்பான கருக்கலைப்புக்கான உரிமையை மறுப்பது அவரது தனிப்பட்ட சுயாட்சி மற்றும் சுதந்திரத்தை … Read more

விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை… 2000 ரூபாய் அபராதம்… உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

விஜய் மல்லையா நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் நடந்ததற்காக அவருக்கு 4 மாத சிறையும்,  2000 ரூபாய் அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  பல கோடி ரூபாய் கடன் பெற்று இந்தியாவை விட்டு தப்பி சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் இல்லை என்றாலும், அவருக்கு எதிரான பல்வேறு வழக்குகள் இங்கு நடந்து வருகிறது. அதற்கான தீர்ப்புகளும் வந்த வண்ணம் தான் இருக்கிறது. அப்படி தான் 2017ஆம் தொடர்ந்த வழக்கிற்கு தற்போது தீர்ப்பு வந்துள்ளது. விஜய் … Read more

BREAKING : ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கு – வாரணாசி நீதிமன்றமே விசாரிக்கலாம் : உச்சகநீதிமன்றம்

ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி நீதிமன்றமே விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  உத்திரபிரதேசம் வாரணாசியில் உலகப் புகழ்பெற்ற விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. அதனை ஒட்டி உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள் சிருங்கார கவுரி சிலையை தினமும் வழிபடுவதற்கு அனுமதி கோரி வாரணாசி நீதிமன்றத்தில் இந்து பெண்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில், மசூதி வளாகத்திற்குள் கள ஆய்வு செய்யவும் அதை வீடியோவாக பதிவு செய்யவும்  வாரணாசி  நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. … Read more

#Breaking:ஆறுமுகசாமி ஆணைய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

டெல்லி:மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. மேலும்,ஆணையத்தின் செயல்பாடுகள்,மருத்துவக்குழு உள்ளிட்டவை பற்றி விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்.

“முல்லைப் பெரியாறு அணை குறித்த தவறான பிரச்சாரம்;தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட வேண்டும்”- ஓபிஎஸ் கோரிக்கை..!

முல்லைப் பெரியாறு அணை பழமையானது என்றும்,அதிக அளவில் தண்ணீர் தேக்கி வைத்தால் அணைக்கு சேதம் ஏற்படும் என்றும் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். கேரள அரசுடனான நல்லுறவை பேணி பாதுகாக்கும் அதே வேளையில் முல்லை பெரியாறு பாசன விவசாய பிரதிநிகளுடன் கலந்து ஆலோசித்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக … Read more

#Breaking:நில அபகரிப்பு வழக்குகள்;சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா? – உச்ச நீதிமன்றம் கேள்வி..!

தமிழகத்தில் நில அபகரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது .இதனை எதிர்த்து,தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இத்தகைய சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படலாம் என அனுமதி வழங்கியது.அதன்பின்னர்,கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழகம் … Read more

Breaking:10% இடஒதுக்கீடு – மத்திய அரசு மேல்முறையீடு …!

மருத்துவப் படிப்பில் பின் தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதலே இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று முன்னதாக மத்திய அரசு அறிவித்தது.அதன்படி, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதற்கிடையில்,மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% … Read more

கொரோனாவை விரட்ட எறும்பு சட்னியா…? தடுப்பூசி போடுங்கள் – உச்ச நீதிமன்றம்!

கொரோனாவை ஒழிக்க நாட்டிலுள்ள அனைவருக்கும் சிவப்பு எறும்பு சட்னி ஆர்டர் செய்ய முடியாது, அனைவரும் தடுப்பூசி எடுத்து கொள்ளுங்கள் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  கொரோனா பரவல் நாடு முழுவதிலும் தற்பொழுதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவை ஒழிக்கும் விதமாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கக்கூடிய பழங்குடியினர் சிவப்பு எறும்பு சட்னியை விருப்ப உணவாக சாப்பிட வருகின்றனர். இந்த சிவப்பு எறும்புகள் … Read more