ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்ததே அதிமுக தான் – அமைச்சர் மனோ தங்கராஜ்

அதிமுக தான் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தது என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி.  அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், அதிமுக தான் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தது. ஆணையம் கூறியது உண்மை. குற்றம் செய்யவில்லை என்றால் இவர்களெல்லாம் எதற்காக பயப்படுகிறார்கள். குற்றம் செய்த நெஞ்சம் தான் குறுகுறுக்கும். ஒரு கட்சி எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் அரசியல் என்று பேசுவது அர்த்தம் இல்லாதது. திமுக … Read more

பிரதமர் மோடி இதை செய்திருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம் – கே.எஸ்.அழகிரி

ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துறை என கே.எஸ்.அழகிரி ட்விட். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் உள்ள உண்மை தன்மையை ஆராய நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைத்து அந்த விசாரணை அறிக்கை  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, … Read more

ஜெயலலிதா மரண வழக்கை கிரிமினல் வழக்காக விசாரிக்க கோரிக்கை.! அமைச்சர் ரகுபதி தகவல்.!

சட்டமன்றத்தில் ஜெயலலிதா மரணம் குறித்த ஆணைய அறிக்கையை தாக்கல் செய்யும் போது அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்கள். இந்த ஆணையம் அளித்த தரவுகளின் அடிப்படையில் சம்பந்தபட்டவர்கள் மீது கிருமினல் வழக்கு பதிய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். என அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார்.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதன் உண்மை தன்மை ஆராய நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைத்து அந்த விசாரணை அறிக்கை அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் பல்வேறு … Read more

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வர் பதவிக்கு தயார்.! அரசியல் லாபத்திற்கு தர்மயுத்தம்.! ஓபிஎஸ் மீதனா குற்றசாட்டுகள்.!

ஜெயலலிதா இறந்தவுடன் காலம் தாழ்த்தாமல் முதல்வர் பதவிக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார் ஓபிஎஸ். அதன் பின்னர் நடந்த அரசியல் சம்பவங்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால், கோவம் வந்து ஓபிஎஸ் தனது சுய லாபத்துக்காக தர்மயுத்தம் தொடங்கினார். – என ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் ஓபிஎஸ் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது  நேற்று சட்டப்பேரவையில், மறைந்த முன்னாள் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவன் மரணம் தொடர்பான உண்மைகளை அறிய விசாரணை மேற்கொள்ள நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணைய … Read more

ஜெயலலிதாவின் மரணம் குறித்து சர்ச்சைகளை எழுப்பியதே திமுக தான் – டிடிவி தினகரன்

மக்கள் வரிப்பணத்தை வீணாக்க, அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்டது ஆணையம் என டிடிவி தினகரன் பேச்சு.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன் அவர்கள், ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது தான். ஜெயலலிதாவின் மரணம் குறித்து சர்ச்சைகளை எழுப்பியதே திமுக தான். மக்கள் வரிப்பணத்தை வீணாக்க, அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்டது ஆணையம் என தெரிவித்துள்ளார். மேலும், எய்ம்ஸ் மருத்துவர்களின் … Read more

#ஜெ.மரணம்:விசாரணையை முடித்த ஆறுமுகசாமி ஆணையம் – தமிழக அரசு போட்ட உத்தரவு!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக பல்வேறுசர்ச்சைகள் எழுந்த நிலையில்,அவரது மரணம் குறித்து விசாரிக்க கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு,ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.அதன்படி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து,3 ஆண்டுகளுக்கு பின் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக,அண்மையில் மீண்டும் விசாரணையை தொடங்கிய நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் … Read more

ஜெ.மரணம் – இன்று முதல் 3 நாட்கள் அப்பல்லோவிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்களிடம் இன்று முதல் 3 நாட்கள் மறுவிசாரனையை ஆறுமுகசாமி ஆணையம் நடத்த உள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக விசாரிக்க கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  தமிழக அரசு ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது. அதன்படி,ஜெயலலிதா மரணம் தொடர்பாக 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து,3 ஆண்டுகளுக்கு பின் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா … Read more

#BREAKING : ஜெயலலிதா மரணம் – 2-வது நாளாக ஓபிஎஸ் விசாரணைக்கு ஆஜர்..!

ஓபிஎஸ் -இடம் 2-வது நாளாக இன்றும் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் உள்ள ஆணைய அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக 75 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி அவர் காலமானார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆறுமுகசாமி ஆணையம்  கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் … Read more

ஜெயலலிதா மரணம் – ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்றும் விசாரணை!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் மார்ச் 21-ஆம் தேதி(நேற்று) ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே சம்மன் அனுப்பியது.மேலும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. சசிகலா தான் பார்த்துக்கொண்டார்: அதன்படி,ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா அண்ணன் மனைவி இளவரசி நேற்று ஆஜராகினார்.இவரிடம் 10:30 – 11:30 மணி வரை விசாரணை நடைபெற்றது. அப்போது,”அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் … Read more

#Breaking:’எதுவும் தெரியாது’ என கூறும் ஓபிஎஸ்-மீண்டும் விசாரணை!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் மார்ச் 21-ஆம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. மேலும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கும் 21-ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. சசிகலா தான் பார்த்துக்கொண்டார்: அதன்படி,ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆஜராகினார்.இவரிடம் 10:30 – 11:30 மணி வரை விசாரணை நடைபெற்றது. அப்போது,”அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் … Read more