2024 தேர்தல் கூட்டணி நிலவரம்.! தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு தேசிய தலைமை அழைப்பு.!

KS Alagiri - mallikarjuna karge

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் , கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணியில் கட்டமைத்துள்ளன. இதற்கான ஆலோசனை கூட்டங்களும் அப்போது நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தியின் அடுத்த பயணம் மணிப்பூர் டு மும்பை- காங்கிரஸ் அறிவிப்பு ..! அதே வேளையில், காங்கிரஸ் கட்சி தங்களது கூட்டணி பேச்சுவார்த்தை குறித்தும் தொகுதி பங்கீடுகள் குறித்தும், … Read more

தமிழக ஆளுநர் அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் -ம் கே.எஸ்.அழகிரி

ksalagiri

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர்,  உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் எல்லை மீறுகின்ற ஆளுநர்களின் தலையில் ஒரு குட்டு வைத்துள்ளது. ஆர்.என்.ரவி போன்றவர்களுக்கு இந்த இழுக்கு தேவையில்லை என்பது என்னுடைய கருத்து. உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதை சொல்லியிருக்கிறார்கள். ஆளுநர் ரவி முன்பே இதை தெரிந்து வைத்திருக்கலாம். அல்லாது இவர் தெரிந்தும் தெரியாதது போல நடித்திருக்கலாம் என சந்தேகம் … Read more

சென்னையில் நாளை காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம்..!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நாளை காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.  சென்னை சத்தியமூர்த்தி பவனில் நாளை காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டமானது மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்..!

தமிழ்நாடு காங்கிரஸ் கிறிஸ்துவ நண்பர்கள் சார்பில் இன்று கிறிஸ்துமஸ் விழா.  தமிழ்நாடு காங்கிரஸ் கிறிஸ்துவ நண்பர்கள் சார்பில் இன்று  மாலை 5.00 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கிறிஸ்துவ நண்பர்கள் சார்பில் திரு. ஜி.கே. தாஸ் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் சட்டமன்ற காங்கிரஸ் … Read more

ஆளுநர் இதை நிறுத்தவில்லை என்றால் கடும் விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் – கே.எஸ்.அழகிரி

ஆதாரமற்ற அவதூறு பேச்சுகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் கே.எஸ்.அழகிரி ட்வீட்.  ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதாரமற்ற அவதூறு பேச்சுகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘ஆளுநராக நியமனம் செய்யப்பட்டது முதல் ஒரு அரசியல்வாதியாக பா.ஜ.க.வின் கொள்கை பரப்பு செயலாளராக, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிற ஆர்.என். ரவி, தமது அத்துமீறிய ஆதாரமற்ற அவதூறு பேச்சுகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படி நிறுத்தவில்லை என்றால் … Read more

காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரபலம் காலமானார்..! கே.எஸ்.அழகிரி இரங்கல்..!

முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு. ஜி. பழனிச்சாமி அவர்கள் காலமானார்.  தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு. ஜி. பழனிச்சாமி அவர்கள் இன்று காலமானார். இவரது மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் குறிப்பில், ‘எனது நீண்டநாளைய நெருங்கிய நண்பரும், புவனகிரி ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான திரு. ஜி. பழனிச்சாமி அவர்கள் காலமான செய்தி அறிந்து … Read more

தேர்தல் அதிகாரி விஷயத்தில் மத்திய அரசு விதிமீறியதால் உச்சநீதிமன்றம் கேள்வி.! கே.எஸ்.அழகிரி குற்றசாட்டு.!

தேர்தல் அதிகாரியை நியமிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு விதிமீறி செயல்பட்டுள்ளது. – தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி. தலைமை தேர்தல் அதிகாரியை நியமித்தது தொடர்பாக அண்மையில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை கேட்டு விளக்கம் கேட்டுள்ளது. தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்கும் வழிமுறைகள் குறித்தும், தற்போதைய தேர்தல் அதிகாரியை எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள் என்பதை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது. இது குறித்து இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். இன்று காங்கிரஸ் … Read more

காங்கிரஸ் அலுவலகத்தில் சலசலப்பு எதிரொலி.! நாங்குநேரி எம்.எல்.ஏ கட்சியில் இருந்து நீக்கம்.!

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த சலசலப்புக்கு காரணம் நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரன் என கூறி அவரை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று சென்னை சத்யமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சி தலைமையானது, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட 8 வட்டார தலைவர்களையும் மாற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்குநேரி … Read more

காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்.!

திருநெல்வேலிக்கு புதிய மாவட்ட நிர்வாகிகளை நியமித்தது தொடர்பாக காங்கிரஸ் தொண்டர்கள் , சத்யமூர்த்தி பவனை முற்றுகையிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.  வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் இன்று சென்னை சத்யமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சி தலைமையானது, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளராக கே.பி.கே.ஜெயக்குமார் அவர்களையும், நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பழைய 8 வட்டார தலைவர்களையும் நியமித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி, நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ … Read more

கூட்டணி வேறு.! கொள்கை வேறு.! திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது.! காங்கிரஸ் தலைவர் பேட்டி,!

திமுக – காங்கிரஸ் கூட்டணி வேறு, கொள்கை வேறு. திமுக கூட்டணியில் இருந்தாலும் எங்களால் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்த்தில் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலையை அடுத்து, நளினி உள்ளிட்ட 6 பேர் சனிக்கிழமை விடுதலை ஆகினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கருத்துக்களை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சென்னை கிண்டியில் சந்தித்து குறிப்பிட்டார். அதில், ‘ ராஜீவ் … Read more