ஜெயலலிதாவின் மரணம் குறித்து சர்ச்சைகளை எழுப்பியதே திமுக தான் – டிடிவி தினகரன்

மக்கள் வரிப்பணத்தை வீணாக்க, அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்டது ஆணையம் என டிடிவி தினகரன் பேச்சு. 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன் அவர்கள், ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது தான். ஜெயலலிதாவின் மரணம் குறித்து சர்ச்சைகளை எழுப்பியதே திமுக தான். மக்கள் வரிப்பணத்தை வீணாக்க, அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்டது ஆணையம் என தெரிவித்துள்ளார்.

மேலும், எய்ம்ஸ் மருத்துவர்களின் கருத்தையே ஆணையம் நிராகரித்துள்ளது. சசிகலா, விஜயபாஸ்கர் எல்லாம் அரசியல்வாதிகள். ஆனால் IAS அதிகாரி ராதாகிருஷ்ணன் நேர்மையான அதிகாரி. அவர் மேலும் ஆணையம் குற்றம் சுமத்தியுள்ளது. எதையும் எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment