டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் (ED) இன்று தற்காலிகமாக முடக்கியது . சில நாட்களுக்கு முன்பு, ரன்யா ராவ் பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள 14.213 கிலோ மறைத்து வைக்கப்பட்ட 24 காரட் தங்கத்துடன் பிடிபட்டார். அதைத் தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.2.67 […]
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மூலம் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு பணமோசடி நடந்ததாகவும், இதில் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது. இந்த வழக்கில் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை, டாஸ்மாக் பணமோசடி வழக்கு தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரனின் சென்னை அல்வார்பேட்டையில் […]
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை சமர்ப்பித்த ஆவணங்கள் போதுமான ஆதாரங்களாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு டாஸ்மாக்கில் மதுபான கொள்முதல், பார் உரிமங்கள் வழங்குதல், மதுபான போக்குவரத்து டெண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ரூ.1000 கோடி மதிப்பிலான முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்த முறைகேடுகளில் சில முக்கிய […]
கர்நாடகா : முதலமைச்சர் சித்தராமையா மீதான மைசூர் நகர வளர்ச்சி ஆணையம் (மூடா) தொடர்பான ஊழல் புகார் தொடர்பாக அமலாக்கத்துறை (ED) தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில், சித்தராமையாவின் மனைவி பார்வதியிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட 3.16 ஏக்கர் நிலத்திற்கு மாற்று நிலம் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன் சாமி மற்றும் நிலம் விற்ற தேவராஜு ஆகியோர் மீது லோக்ஆயுக்தா மற்றும் அமலாக்கத்துறை […]
சென்னை : தமிழகத்தில் அமலாக்கத்துறை தொடர்ச்சியாக பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், புதுக்கோட்டையில் மே 24-அன்று செய்தியாளர்களை சந்தித்த துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் “மோடிக்கும் பயமில்லை, ED-க்கும் பயமில்லை” என தெரிவித்திருந்தார். இவர் இப்படி பேசியிருந்த நிலையில், பாஜகவை சேர்ந்தவர்கள் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேச தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் […]
சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக, அமலாக்கத்துறை ரெய்டுக்கு அஞ்சியே 3 ஆண்டுகளாக புறக்கணித்து வந்த நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தாண்டு முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க டெல்லி சென்றதாக இபிஎஸ், சீமான் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர். இந்த நிலையில், ‘ஈடி அல்ல மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம். மிரட்டி அடிபணிந்து பயப்படுவதற்கு அடிமைக் கட்சி கிடையாது’ என்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இன்று தமிழ்நாட்டில் […]
சென்னை : தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளது. தற்போது அது தொடர்பான 41 வழக்குகளின் நிலையை விவரிக்கத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சோதனைக்கு பிறகு, தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிர்வாக இயக்குநரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் இந்த சோதனைகளை “சட்டவிரோதமானவை” எனவும், மாநில அரசின் அனுமதியின்றி அமலாக்கத்துறை விசாரணை நடத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கு […]
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட வழக்கில், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் இருக்கிறார். அவர் ஜாமீன் மனுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு பதியப்பட்டது. ஜாமீனில் வெளியே வந்த பிறகு மீண்டும் அமைச்சர் பதவி ஏற்ற செந்தில் பாலாஜிக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடந்த வாரம் அதிருப்தி தெரிவித்து இருந்தது. […]
செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கு தொடர்பாக, நடிகர் மகேஷ் பாபுவை ஏப்ரல் 27 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகஅமலாக்க இயக்குநரகம் (ED) சம்மன் அனுப்பியுள்ளது. ஒரே நிலத்தை வெவ்வேறு நபர்களுக்கு விற்று ஏமாற்றியதாக, சூரானா குழுமம், சாய் சூர்யா டெவலப்பர்கள் மீது புகார்கள் உள்ளன. இந்த நிறுவனங்களின் விளம்பரத்தில் நடிக்க மகேஷ் பாபு பெற்ற ரூ.2.5 கோடி, மோசடி […]
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தியது. டாஸ்மாக் என்பது தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை கட்டுப்படுத்தும் அரசு நிறுவனம். இந்த சோதனையில், அமலாக்கத்துறை ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தது. அவர்கள் இதை நிதி முறைகேடு மற்றும் ஊழல் சம்பந்தமாக செய்ததாக கூறினர். ஆனால், இந்த சோதனை தமிழ்நாடு அரசுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சோதனைக்கு பிறகு, தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் […]
சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் ‘எம்புரான்’ திரைப்பட தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடைபெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி, ‘எம்புரான்’ திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலன் என்பவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்றம்தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.காலை 10 மணி முதல் தொடங்கிய […]
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது, இந்தச் சோதனையில், டெண்டர் செயல்முறைகள், மதுபான விலை நிர்ணயம், பார் உரிமங்கள், மற்றும் நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. மேலும், ரூ.1,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களை கைப்பற்றியதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தமிழக அரசியலில் புயலை கிளப்பிய […]
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தச் சோதனைகள் மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற்றது. அமலாக்கத்துறையின் அறிக்கையின்படி, இந்த சோதனையின் போது, டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டது. இது தமிழக அரசியலில் புயலை கிளப்பிய நிலையில் எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து டாஸ்மாக் […]
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல் நடத்திய சோதனைகளில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சோதனைகள் மார்ச் 6, 2025 அன்று தொடங்கி, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்கள், மது உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய நபர்களின் இடங்களில் நடைபெற்றன. ED விசாரணையில் டெண்டர்களில் ரூ.1,000 கோடி முறைகேடுகள், நிதி முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் […]
சென்னை : கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ திரைப்படம் காப்புரிமை மீறல் தொடர்பான வழக்கில், இயக்குநர் ஷங்கரின் ரூ.11.10 கோடி மதிப்புள்ள சொத்தை தற்காலிகமாக பறிமுதல் செய்ய அமலாக்க இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தற்போது நிறுத்தி வைத்துள்ளது. இயக்குநர் ஷங்கர் தனது கதையைத் திருடி ‘எந்திரன்’ திரைப்படத்தை எடுத்ததாக, அவர் மீது நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு […]
சென்னை : ‘எந்திரன்’ திரைப்படத்தின் காப்புரிமை தொடர்பாக இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்திரன் படத்துக்காக இயக்குனர் ஷங்கர் பெற்ற பணத்திற்கு சமமான சொத்துக்களைதான் தற்போது அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. ஒருவேளை இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் குற்றவாளி என உறுதியானால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படத் திருட்டு அல்லது காப்புரிமை மீறல் என்கிற அடிப்படையில், பணமோசடி தடுப்புச் […]
சென்னை : கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் திமுக எம்.பி. கதிர் ஆனந்தின் வீடு மற்றும் அவரது சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் அதிரடியான சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனைகள் சுமார் 44 மணி நேரம் நடந்ததாக சொல்லப்படுகிறது. சோதனையின் போது, கல்லூரியின் அலுவலக ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை ஆவணங்கள், கணினி ஹார்ட் டிஸ்க் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கல்லூரியில் பணம் வைக்கும் அறையில், பணம் இருந்ததை கண்டறிந்து, வங்கி ஊழியர்கள் […]
டெல்லி : ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதலில் அமலாக்கத்துறையினர் கைது செய்து இருந்தனர். அடுத்ததாக இதே வழக்கில் சிபிஐ விசாரணை குழுவினரும் கைது செய்தனர். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட வழக்கில், கெஜ்ரிவாலுக்கு முன்னதாக ஜாமீன் வழங்கப்பட்டு இருந்தாலும், சிபிஐ வழக்கில் அவர் கைதாகி இருந்ததால் கெஜ்ரிவால், டெல்லி திகார் சிறையிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், சிபிஐ பதிவு செய்திருந்த வழக்கில் ஜாமீன் […]
சென்னை : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத்துறை ரூ.908 கோடி அபராதம் விதித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் தொகுதி திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகனுக்கு, ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. அதன் அடிப்படையில், ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை பெறாமல், சிங்கப்பூர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் சட்டவிதிகள் […]
அரவிந்த் கெஜ்ரிவால் : மதுமான கொள்கை வழக்கு தொடர்பாக, சிபிஐயால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை இன்று நீதிமன்றம் விசாரணையை எடுத்துக்கொண்டது. கடந்த ஜூன் 26 ஆம் தேதி அன்று, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகு டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ இந்த வழக்கில் அவரை முறைப்படி கைது செய்தது. இது தொடர்பான வழக்கில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மீ கட்சிக்கு எதிராக அமலாக்க துறையினார் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையை டெல்லி […]