மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா.? தீர்ப்பு தேதி அறிவிப்பு!

manish sisodia

Manish Sisodia: மணீஷ் சிசோடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவு. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கே.கவிதா ஆகியோர் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்.26ம் தேதி சிபிஐ கைது செய்தது. அதேசமயம் … Read more

போதைப்பொருள் விவகாரம்: இயக்குனர் அமீர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

Drug Case: போதைப்பொருள் வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக், இயக்குனர் அமீர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைதான நிலையில், ஜாபர் சாதிக்கின் வீடு, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. ஜாபர் சாதிக் உடனான தொடர்பின் அடிப்படையில் சென்னை தியாகராய நகர் பாண்டிபசாரில் உள்ள இயக்குனர் அமீரின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் … Read more

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு – அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

senthil balaji

Senthil Balaji: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ். கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதன்பின் செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, இதற்கான நகலும் அவரிடம் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி பல்வேறு முறை செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றமும், … Read more

சிறையில் இருந்துகொண்டே முதல்வர் வேலையை பார்க்கும் கெஜ்ரிவால்.! பறக்கும் உத்தரவுகள்…

Delhi CM Arvind Kejriwal

Arvind Kejriwal : டெல்லி சிறையில் இருந்து கொண்டே மாநில முதல்வராக தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் தற்போது வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். அமலாக்கதுறை விசாரணையில் இருந்தாலும் முதல்வராக தனது பதவியை தொடர்ந்து செய்து வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். … Read more

ED கேட்டது 10 நாள்… கொடுத்தது 6 நாள்.! கெஜ்ரிவாலுக்கு நீதிமன்ற காவல் உத்தரவு.!

Arvind Kejriwal AAP Leader

Arvind Kejriwal : டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் நேற்று அவருக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனை முடிந்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை தரப்பில் வாதிடுகையில், மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முக்கிய நபராக அரவிந்த் … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 10 நாள் நீதிமன்ற காவல்.? நீதிமன்றத்தில் பரபரக்கும் வாதம்

Delhi CM Arvind Kejriwal

Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையினரால் நேற்று டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். 9 முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராக காரணத்தால் நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி பின்னர் அமலாக்கத்துறையினர் கைது செய்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். Read More – கெஜ்ரிவாலுக்கு மருத்துவ பரிசோதனை… இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு.! கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி அமலாக்கத்துறை … Read more

கெஜ்ரிவாலுக்கு மருத்துவ பரிசோதனை… இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு.!

Delhi CM Arvind Kejriwal Arrested

Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இதுவரை 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். Read More – கெஜ்ரிவால் கைது..! வீட்டை சுற்றி 144 தடை.. டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு! மேலும், அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பு வழக்கு தொடர்ந்து … Read more

அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன்.! தமிழக அரசு கடும் எதிர்ப்பு.! 

Ankit tiwari - Supreme court of India

Ankit Tiwari : திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவர் சுரேஷ் பாபு என்பவரை மிரட்டி அமலாக்கத்துறை அதிகாரியாக இருந்த அங்கித் திவாரி 20 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது. Read More – 5000 ரூபாய் பணம்.? 2 சிறுவர்களை கொடூரமாக வெட்டி கொலை செய்த கொடூரன்.!   இந்த வழக்கில் இருந்து இடைக்கால ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்றத்தை அடுத்து உச்சநீதிமன்றத்தில் அங்கித் திவாரி வழக்கு தொடர்ந்து … Read more

செந்தில் பாலாஜி விவகாரத்தில் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை.! அமலாக்கத்துறை விளக்கம்.

Former Minister Senthil balaji

Senthil Balaji – கடந்த வருடம் ஜூன் மாதம் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாகத்துறையின் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையானது, எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து, இந்த வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக பதியப்பட்டு உள்ளது. அதனால் தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று … Read more

செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை.! 

Minister Senthil Balaji - Enforcement Department

கடந்த 2023 ஜூன் மாதம் 14ஆம் தேதி தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் தற்போது வரையில் புழல் சிறையில் அமலாக்கதுறை விசாரணையில் இருக்கிறார். 15ஆவது ஊதிய ஒப்பந்தம்.. குழு அமைத்த தமிழக அரசு..! கடந்த 2023 மே மாதம் முதலே வருமானவரித்துறையினர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து அமலாக்கத்துறையினரும் செந்தில் பாலாஜிக்கு … Read more