‘நான் தான் ஜெயலலிதா மகள்’ – அதிரடியாக கிளம்பிய பெண்…!

கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த பிரேமா என்ற பெண், ‘நான் தான் ஜெயலலிதா மகள்’ என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.  அதிமுகவில் ஏற்கனவே பல வகைகளில் சலசலப்புகள் நிகழ்ந்து வரும் நிலையில்,  கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த பிரேமா என்ற பெண், தீபாவளி தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு நேற்று அஞ்சலி செலுத்துவதற்காக வந்துள்ளார். அப்போதுதான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறியுள்ளார். இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவருக்கு அஞ்சலி … Read more

முல்லை பெரியாறு அணை விவகாரத்தைப் பற்றி பேச ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருக்கு தகுதியில்லை – அமைச்சர் துரைமுருகன்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை பற்றி பேச இபிஎஸ் ஓபிஎஸ் ஆகியோருக்கு தகுதி இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் பேட்டி. முல்லைப் பெரியாறு அணையி நீர்மட்டம், 136.50 அடியை கடந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி, சக்கரபாணி ஆகியோர் படகில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். ஆணை நீர்மட்டத்தை 142 அடிவரை தேக்காமல் கேரளாவுக்கு நீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த … Read more

பெயரளவில் பெட்ரோலுக்கு மட்டும் ரூ.3 விலை குறைப்பு செய்த திமுகவின் விடியா அரசே! – ஈபிஎஸ்

மக்கள் நலனுக்காக மத்திய அரசு தன் கலால் வரியை பெட்ரோலுக்கு ரூ.5 மற்றும் டீசலுக்கு ரூ.10 விலை குறைப்பு செய்துள்ளதற்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி இன்று முதல் ரூ.5 மற்றும் ரூ.10 குறைக்கப்படும் என்று தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு  அறிவித்தது. அதன்படி, இந்த அறிவிப்பானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் இதுகுறித்து … Read more

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு..! பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்…!

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்புக்கு பிரதமருக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி இன்று முதல் ரூ.5 மற்றும் ரூ.10 குறைக்கப்படும் என்று தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு  அறிவித்தது. அதன்படி, இந்த அறிவிப்பானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இந்த விலை குறைப்பு வாகனஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், பெட்ரோல் மற்றும் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:அதிமுக நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ்,இபிஎஸ் முக்கிய அறிவிப்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ்,இபிஎஸ் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளில் மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.அதன்படி,சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட இடங்களில் வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமித்தல், சிறப்பு முகாம் நடைபெறும் … Read more

பாசத்திற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளித் திருநாள் வாழ்த்து-ஓபிஎஸ்,இபிஎஸ் அறிவிப்பு!

தீப ஒளித் திருநாளில் மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட, எல்லாம் வல்ல இறைவனின் அருள் கிடைக்கட்டும் என்று ஓபிஎஸ்,இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.இந்நிலையில், பாசத்திற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் தங்களது உளங்கனிந்த தித்திக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும்,இது தொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் … Read more

மரம் சரிந்து விழுந்ததில் உயிரிழந்த பெண் காவலர்..! இரங்கல் தெரிவித்த ஓபிஎஸ்…!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், பெண் காவலர் கவிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்தது. இதில், அரக்கோணத்தை சேர்ந்த பெண் காவலர் கவிதா  உயிரிழந்துள்ளார். மேலும், பெரியமரம் சாய்ந்து விழுந்ததில் ஒரு போக்குவரத்து காவலர் காயமடைந்த நிலையில், 2 … Read more

#Breaking:முல்லைப் பெரியாறு:நவ.9 ஆம் தேதி அதிமுக ஆர்பாட்டம் – ஓபிஎஸ்,இபிஎஸ் அறிவிப்பு..!

முல்லைப் பெரியாறு அணையில் நீர் இருப்பை அதிகரிக்க 5 மாவட்டங்களில் நவ.9 ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்பாட்டம்  நடைபெறும் என்று ஓபிஎஸ்,இபிஎஸ் அறிவித்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணையில் நீர் இருப்பை அதிகரிக்க வலியுறுத்தி 5 மாவட்ட தலைநகரங்களில் வருகின்ற நவம்பர் 9 ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். அதன்படி,தேனி,மதுரை,திண்டுக்கல் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் … Read more

அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த சசிகலா…!

அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த சசிகலா. தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த  அறிக்கையில், ‘இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும் தீமைகள் அகன்று நன்மைகள் பிரகாசிக்கும் தினமாகவும் கொண்டாடப்படுகின்ற இந்த நன்னாளில் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பெரும் தொற்றான கொரோனா என்னும் கொடிய நோயை வென்று மனிதகுலம்மீண்டும் புத்துயிர் பெற்று கொண்டாடும் வகையில் … Read more

மக்களுக்காக தான் சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் அல்ல…! – ஓபிஎஸ் அறிக்கை

காவிரி டெல்ட்டாவில் பெட்ரோல் கெமிக்கல் மண்டலம் உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை  வெளியிட்டுள்ளார். காவிரி டெல்ட்டாவில் பெட்ரோல் கெமிக்கல் மண்டலம் உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை  வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘காவேரி டெல்டா: மண்டலத்திற்குட்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆண்டிற்கு ஒன்பது மில்லியன் டன் சுத்திகரிப்பு திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கும் பணியினை இந்தியன் … Read more