பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு..! பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்…!

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்புக்கு பிரதமருக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி இன்று முதல் ரூ.5 மற்றும் ரூ.10 குறைக்கப்படும் என்று தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு  அறிவித்தது. அதன்படி, இந்த அறிவிப்பானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இந்த விலை குறைப்பு வாகனஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்புக்கு பிரதமருக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்புக்கு பிரதமருக்கு நன்றி. இதனால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.