தீபாவளி பண்டிகைக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு..!

தீபாவளி பண்டிகைக்கு பின் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பள்ளி கல்லூரிகளுக்கு கடந்த சனிக்கிழமை முதல் நேற்று வரை 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 280 தீ விபத்து சம்பவங்கள் – தீயணைப்புத்துறை

தமிழ்நாடு முழுவதும் நேற்று 280 தீ விபத்து சம்பவங்கள் ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை தகவல்.  நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும், புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, பண்டிகையை மிகவும் கோலாகலமாக கொண்டாடினர். இந்த நிலையில், தமிழகத்தை  பொறுத்தவரையில்,காலை மாற்று மாலை என 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பான முறையில் தீபவளி கொண்டாடவும் அறிவுரை வழங்கப்பட்டது. இந்த நிலையில், தீபாவளியாக நேற்று 280 இடங்களில் … Read more

தீபாவளி பண்டிகை – கடந்த மூன்று நாட்களாக மது விற்பனை அமோகம்..! எத்தனை கோடி தெரியுமா..?

கடந்த மூன்று நாட்களில் ரூ.708 கோடி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களில் ரூ.708 கோடி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் ரூ.244.08 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.139 கோடி, கோவை … Read more

மகிழ்ச்சியில் மாணவர்கள்…! பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!

இன்று  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை முதல் விடுமுறை அளிக்கப்பட்டியிருந்த, இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ இவ்வாண்டு தீபாவளி பண்டிகை 24.10.2022 அன்று கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு … Read more

தீபாவளி வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட்…!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட்.  இன்று நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். இந்த மங்கள பண்டிகை நம் வாழ்வில், மகிழ்ச்சி, நல்வாழ்வை மேம்படுத்தட்டும். குடும்பத்தினர், நண்பர்களுடன் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

தீபாவளி பண்டிகை – மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்…! தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை முதல் விடுமுறை அளிக்கப்பட்டியிருந்த, நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ இவ்வாண்டு தீபாவளி பண்டிகை 24.10.2022 அன்று கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் இன்று அயோத்தி பயணம்…!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் இன்று அயோத்தி பயணம் மேற்கொள்கிறார்.  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று அயோத்தி செல்கிறார். அயோத்தியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பிரம்மாண்டமான தீபோற்சவம்  நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 15 லட்சத்துக்கு அதிகமான தீபங்களை ஏற்றுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வினை பிரதமர் இன்று மாலை தொடங்கி வைக்கிறார். பின்னர் நதிக்கரையில் ஆரத்தி வழிபாட்டிலும் ஈடுபட உள்ளார். அயோத்தி தீபோற்சவ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி … Read more

இந்த 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தீபாவளியான நாளை மறுநாள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து மூன்று நாட்களுக்கு தினமும் தலா 2,100 பேருந்துகளுடன் 4,218 சிறப்பு பேருந்துகள் என 10 ஆயிரத்து 518 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற ஊர்களில் இருந்து இன்று முதல் 23ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு 6,370 சிறப்பு பேருந்துகள் … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் இன்று முதல் சிறப்பு காட்சிக்கு அனுமதி…!

தீபாவளிக்கு திரையரங்குகளில் இன்று முதல் சிறப்பு காட்சிகள் வெளியிட அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களின் சிரமங்களை தவிர்க்கவும், பாதுகாப்பான, மகிழ்ச்சியான தீபாவளியை கொண்டாடும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, தீபாவளிக்கு இன்று முதல் திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் வெளியிட அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், கார்த்தியின் சர்தார் படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.