தீபாவளி பண்டிகை – கடந்த மூன்று நாட்களாக மது விற்பனை அமோகம்..! எத்தனை கோடி தெரியுமா..?

கடந்த மூன்று நாட்களில் ரூ.708 கோடி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே மது விற்பனை அமோகமாக நடைபெற்றது.

இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களில் ரூ.708 கோடி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் ரூ.244.08 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.139 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.133 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment