தமிழ்நாடு முழுவதும் 280 தீ விபத்து சம்பவங்கள் – தீயணைப்புத்துறை

தமிழ்நாடு முழுவதும் நேற்று 280 தீ விபத்து சம்பவங்கள் ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை தகவல். 

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும், புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, பண்டிகையை மிகவும் கோலாகலமாக கொண்டாடினர்.

இந்த நிலையில், தமிழகத்தை  பொறுத்தவரையில்,காலை மாற்று மாலை என 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பான முறையில் தீபவளி கொண்டாடவும் அறிவுரை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தீபாவளியாக நேற்று 280 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை தகவல் அளித்துள்ளது. மேலும், நேற்று மட்டும் 300-க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment