32.2 C
Chennai
Friday, June 2, 2023

அதானி விவகாரம்..பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்..! புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்..!

அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய...

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த்...

ஜெயிலர் ஷூட்டிங் ஓவர்…கேக் வெட்டி படக்குழு உடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

கோர விபத்து..அரசுப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய கண்டெய்னர் லாரி..! 6 பேர் பலி, 10 பேர் காயம்..!

மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து மீது லாரி ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் உள்ள சிந்த்கேதராஜா அருகே அரசு போக்குவரத்துக் கழக பேருந்தும், வேகமாக வந்த கண்டெய்னர் லாரியும் மோதிக் கொண்டதில் இரு வாகனங்களின் ஓட்டுநர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் காயமடைந்துள்ளனர்.

மும்பை-நாக்பூர் இடையே உள்ள நெடுஞ்சாலையில் புனேயில் இருந்து மகேகருக்குச் செல்லும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. பின் எதிரே அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்பு மற்றும் அவசரகால மருத்துவக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக சிந்தகேதராஜா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும், உயிரிழந்த பேருந்து ஓட்டுநர் ஷேக் குலால், அரசு போக்குவரத்து கழக ஊழியர் என போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டெய்னர் லாரி அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டதாகவும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.