RCBvRR: 10 முறை டாஸ் இழந்த விராட் கோலி!ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும்  49-வது ஐபில் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன்  ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : விராத் கோஹ்லி (கேப்டன்), பார்த்திவ் படேல், ஏபி டி வில்லியர்ஸ், மார்கஸ் ஸ்டோனெனிஸ், க்ளாஸன், … Read more

சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக மனு

சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனு கொடுத்துள்ளது. அதிமுக கொறடா ராஜேந்திரன் எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் அமமுகவில் பொறுப்பில் இருப்பதாக சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார்.அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்த நிலையில் 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர  பேரவை செயலாளர் சீனிவாசனிடம் திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் … Read more

போலீஸ் உடையில் மாஸ் காட்டிய ஜோதிகா! ஜாக்பாட் படத்தின் ஃ பஸ்ட் லுக் வெளியானது

நடிகை ஜோதிகா முன்னணி நடிகையான ஜோதிகா  சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார்.இந்நிலையில்  மீண்டும் சினிமாவில் “36 வயதினிலே”திரைப்படம் மூலம் நடிக்க தொடங்கினர். அதன் பிறகு “காற்றின் மொழி” திரைப்படம் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது இவரது நடிப்பில் “ஜாக்பாட்” என்ற பெயரில் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்  வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2D Entertainment நிறுவனம்  தயாரித்து உள்ளது.இப்படத்தில் ரேகா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

அமரப்பள்ளி நிறுவனம் மீது தோனி தொடர்ந்த வழக்கு : அனைத்து பரிவர்த்தனை விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவு

தோனியுடனான அனைத்து பரிவர்த்தனை விவரங்களையும் நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்று  உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது ஐபிஎல் 2019 தொடரில் சென்னை சூப்பர் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் விளம்பர படங்களில் நடிப்பது குறைந்துவிட்டது.ரியல் எஸ்டேட் நிறுவனமான அமரப்பள்ளியின் பிராண்ட் அம்பாசிட்டராக இருந்த தோனிக்கு ஒப்பந்தம் செய்தபடி அவருக்கு வழங்க வேண்டிய தொகை வழங்கப்படவில்லை.சுமார் 6 முதல் 7 … Read more

ஹாலிவுட் பிரபல நடிகர் ஜெஸி லாரன்ஸ் பெர்குசான் காலமானார்

ஹாலிவுட் சினிமாவில்  பிரபலமான நடிகர் ஜெஸி லாரன்ஸ் பெர்குசான்.இவரது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இந்நிலையில் இவர் நடிப்பில்  குட் பை குருயல் வோல்ட், தி சூப்பர் நேச்சுரல்ஸ்,   தி பிரசிடோ டார்க் மேன், பாய்ஸ் இன் த ஹூட் ஆகிய பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக இவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கலிபோர்னியாவில் உள்ள  தனது மகன் ஜேஸூடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலக்குறை காரணமாக … Read more

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ்

3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி உள்ளார் . அதிமுக கொறடா ராஜேந்திரன் எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் அமமுகவில் பொறுப்பில் இருப்பதாக சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார்.மேலும் அதிமுக-வுக்கு எதிராக 3 பேரும் செயல்பட்டதாகவும் புகார் கூறினார். இந்நிலையில் அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்த நிலையில் 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்தியா சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன் -கங்கனா ரனாவத்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. பொதுமக்கள் அனைவரும் நேற்று  தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அத்துடன் பாலிவுட் பிரபலங்கள் பலர் வாக்களித்தனர். இந்நிலையில் நேற்று வாக்களித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரனாவத், இன்றைய காலக்கட்டத்தில் தான் இந்தியா சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன். இதற்கு முன் நாம் ஆங்கிலேயர்களிடமும், இத்தாலி அரசு அடிமையாக இருந்தோம் என கூறினார்.

விதிகளை மீறி பிரதமர் மோடி, அமித்ஷா பரப்புரை! தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் ஆதாயங்களுக்காக பாதுகாப்பு படையினர் குறித்து பிரதமர் மோடி,அமித்ஷா பேசி வருவதாக காங்கிரஸ்  சார்பில் சுஷ்மிதா உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தது.மேலும் இது தொடர்பாக இருவர் மீதும்  தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ்  சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது.இதில் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு … Read more

பிரதமர் மோடியை திருடன் என கூறிய வழக்கு: மன்னிப்பு கேட்டார் ராகுல் காந்தி

பிரதமர் மோடியை திருடன் என உச்சநீதிமன்றம் கூறியதாக பேசிய வழக்கில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டார். ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடர் என்று  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். இந்நிலையில்  பிரதமர் மோடியை ” திருடன் ” என விமர்சித்ததாக பாஜக  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தற்போது மோடியை விமர்சித்த விவகாரத்தில் ஏற்கனவே வருத்தம் தெரிவித்த நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. … Read more

விஷால் தொடர்ந்த வழக்குக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் -உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக  விஷால் உள்ளார். இவர் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்து இவர் மீது ஒரு தரப்பினர் பல குற்றங்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் பதவியில் உள்ள அனைவரும் நீக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.மேலும்  ஒரு சிறப்பு அதிகாரியை அரசு  நியமித்துள்ளது. அந்த சிறப்பு அதிகாரி மூலம்  தயாரிப்பாளர் சங்க நடவடிக்கைகளை பார்த்து அறிவித்துள்ளனர். தற்போது  திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு … Read more