விதிகளை மீறி பிரதமர் மோடி, அமித்ஷா பரப்புரை! தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் ஆதாயங்களுக்காக பாதுகாப்பு படையினர் குறித்து பிரதமர் மோடி,அமித்ஷா பேசி வருவதாக காங்கிரஸ்  சார்பில் சுஷ்மிதா உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தது.மேலும் இது தொடர்பாக இருவர் மீதும்  தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ்  சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது.இதில் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment