தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ்

3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி உள்ளார் .

அதிமுக கொறடா ராஜேந்திரன் எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் அமமுகவில் பொறுப்பில் இருப்பதாக சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார்.மேலும் அதிமுக-வுக்கு எதிராக 3 பேரும் செயல்பட்டதாகவும் புகார் கூறினார்.

இந்நிலையில் அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்த நிலையில் 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.

Leave a Comment