தொடரும் சோகம்...3 முறை 'டக்-அவுட்'... மோசமான சாதனை படைத்த ஜோஸ் பட்லர்.!!

May 20, 2023 - 05:10
 0  1

ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் கடந்த சீசன் ஐபிஎல் தொடரிலும், இந்த சீசன் ஆரம்ப போட்டியிலும் அருமையாக விளையாடி வந்தார். ஆனால், இந்த சீசனில் கடைசியாக நடந்த 3 போட்டியிலும் தொடர்ச்சியாக டக்-அவுட் ஆகியுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியிலும், நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிலும் தொடர்ச்சியாக டக்-அவுட் ஆகி மோசமான சாதனையை படைத்துள்ளார்.

நேற்று நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜோஸ் பட்லர் நான்கு பந்துகளில் டக் அவுட் ஆனார். இது பட்லரின் தொடர்ச்சியான 3-வது டக்-அவுட் இந்த சீசனில் அவரது ஐந்தாவது டக்-வுட் . இதன் மூலம், ஐபிஎல் சீசனில் அதிக டக் அவுட் ஆனவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

கடந்த சீசனில் சிறந்த ஃபார்மில் இருந்த பட்லர்,கடந்த சீசனில் 863 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பி வைத்திருந்த இவர் இந்த சீசனில் டக்-அவுட் ஆகி வருவதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். விரைவில் நல்ல ஃபார்மில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow