நோ பார்க்கிங் ஏரியாவில் பார்க் செய்ததால், 3 கோடிரூபாய் மதிப்ப்புமிக்க காரை நொறுக்கிய போலீசார்

கார் வைத்திருப்பவர்கள் அதனை சிலர் தன் கண் போல பார்த்து கொள்கின்றனர். அப்படி இருக்கையில் ஒருவர் தனது காரை ஓர் இடத்தில்  பார்க் செய்திவிட்டு திரும்பி வந்து பார்கையில் கார் அப்பளமாக நொறுங்கியது கேட்டு அதிர்ச்சியடைந்தார். அந்த  கார் உயர் ரக பெராரி ரக கார் என தெரிந்ததும் பல கார் பிரியர்களின் நெஞ்சமும் நொறுங்கியது. யு.கேவை சேர்ந்த கோடீஸ்வரர்களில் ஒருவரான ஷாகித் கான். இவர். தனது வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களை வெளியேற்றியதற்காக கோர்ட்டில் நடந்த வழக்கில் … Read more

குற்றவாளிகளுக்கு மட்டும் தான் மனித உரிமையா.? காவலர்களுக்கு இல்லையா.? : நீதிபதி கிருபாகரன் கேள்வி…!!

காவல்துறையினர் பிரச்சினைகளை தீர்க்க நிபுணர் குழு அமைக்க உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன்.?. தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நிபுணர் குழுவினர் பட்டியலை வரும் 22 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். பட்டியலை சமர்பிக்க்கவிட்டால் உள்துறை செயலர் நேரில் ஆஜராக நேரிடும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர் அதிகாரிகள் வீட்டில் எவ்வளவு காவலர்கள் வேலை பார்க்கின்றனர்.?. குற்றவாளிகளுக்கு மட்டும் தான் மனித உரிமையா.? காவலர்களுக்கு இல்லையா.? : நீதிபதி கிருபாகரன் கேள்வி.

தமிழகத்தில் நடந்த காவலர்கள் தற்கொலைக்கு காரணம் இது வா…?? சட்டமன்ற பேரவை பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி…

தமிழகத்தில் நடந்த காவலர்கள் தற்கொலை என்பது குடும்ப, உடல்நிலை, காதல் உள்ளிட்ட பிரச்சினைகளால் நிகழ்கிறது. காவலர்கள் தற்கொலையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பணிச்சுமையை கருத்தில் கொண்டு காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உடல்நலத்தை பேணிக்காக்க யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. காவலர்கள் தற்கொலை தொடர்பாக தமிழக சட்டமன்ற பேரவையில் முதலமைச்சர் பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்கன்,  தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட மேலும் 28 இணையதளங்களை முடக்கியது காவல்துறை…!!

தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் புதிய திரைப்படங்களை சட்டத்திற்கு புறம்பாக இணையதளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள் மீது சமீபத்தில் காவல்துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழ்கன்,  தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் இதுவரையில் காவல்துறையினரின் நடவடிக்கைக்கு பின்னர் முடக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் புதிய தமிழ்திரைப்படங்களை பதிவேற்றம் செய்து வந்த மேலும் 28 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. tamilrockers,tamilmvfun என்ற பெயரில் செயல்பட்டு வந்த இணையதளங்கள் முடக்கப்பட்டன.

மோசடி வழக்கில் ஆஜராகும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை துன்புறுத்தக் கூடாது என போலீசுக்கு கோர்ட் உத்தரவு…!!

மோசடி வழக்கில், விசாரணைக்கு ஆஜராகும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை துன்புறுத்தக் கூடாது என தமிழக காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் செய்துள்ளது. கடந்த ஆட்சியில் செந்தில் பாலாஜி தமிழக அமைச்சராக இருக்கும் போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.40 லட்சத்தை 16 பேரிடம் மோசடி செய்ததாக, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை ஸ்ருதி மீது குண்டர் சட்டம் !!!

திருமணம் செய்வதாக கூறி இளைஞர்களிடமும் தொழிலதிபர்களிடமும் பலகோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட நடிகை ஸ்ருதி மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை ஸ்ருதி சமூக வலைதளம் மூலமாக ஏராளமான இளைஞர்களிடமும் தொழிலதிபர்களிடமும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் சேலத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் பாலமுருகனிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பணம் வாங்கியுள்ளார். நடிகை ஸ்ருதியின் அழகிலும் அவருடைய ஆசை வார்த்தைகளிலும் மயங்கிய பாலமுருகன் ஸ்ருதி கேட்க்கும் பொழுதெல்லாம் பணம் … Read more

சிசிடிவி காட்சிகளை வைத்து தேடும் போலீஸ் !!!

சினிமா பைனான்சியர் போத்ராவின் மகள் கரிஷ்மா போத்ராவை கடத்தியது யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா தயாரிப்பாளர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வருபவர் போத்ரா. இவரது மகள் கரிஷ்மா போத்ராவை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை. சினிமா பைனான்சியர் போத்ரா, தி.நகரில் தங்கியிருந்த கரிஷ்மா கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து தி.நகர் துணை ஆணையரிடம்  புகார் அளித்துள்ளார். போத்ரா கந்துவட்டிக்கு பணம் கொடுத்து கைதானவர், அதனால் அவரது எதிரிகள் யாரும் கடத்தியிருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை … Read more

திருப்பூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து 4 பேர் பலி …

காங்கேயம் அருகே கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் பலி ஆனார்கள். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, தங்களது சொந்த ஊருக்கு ஜோதி, லட்சுமி, ஜெனிதா உட்பட 7 பேர் சென்றுக கொண்டிருந்தனர். அப்போது திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் உள்ள திட்டுப்பாறை என்கிற இடத்தில் வளைவான பகுதியில் பயணித்த போது கார் ஓட்டுனரின் கட்டுபாட்டை மீறி நிலைகுலைந்து கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 7 நபர்களில் 3 பெண்கள் உட்பட நான்கு … Read more

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவதுபோல் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் சீன போலீஸ்!

போலீசார் சீனாவில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஸ்கேனருடன் கூடிய உயர் தொழில்நுட்பக் கண்ணாடி ஒன்றை  பயன்படுத்தி வருகின்றனர். ஸெங்சவ் (Zengzhou) ரயில் நிலையத்தில் நான்கு உயர் போலீஸ் அதிகாரிகள் இந்தக் கண்ணாடியை அணிந்தபடி, குற்றவாளிகளைப் பிடித்து வருவதாக சீனாவின் பிப்பிள்ஸ் டெய்லி பத்திரிகை தெரிவிக்கிறது.இந்தக் கண்ணாடியில் உள்ள கேமிரா, கூட்டத்தில் உள்ள சந்தேகத்திற்குரிய நபர்களைப் படம் பிடித்து, அதைக் கண்ணாடியுடன் பொருத்தப்பட்டுள்ள செல்போன் போன்ற உபகரணத்திற்கு அனுப்புகிறது. அந்த உபகரணத்தில் ஏற்கனவே போலீஸ் சேகரித்து வைத்துள்ள தரவுகளை வைத்து அவரது … Read more

காஞ்சி சங்கர மடத்திற்கு 3வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை தொடர்பாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதால் காஞ்சி சங்கர மடத்திற்கு 3வது நாளாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் அவமதித்த விஜயேந்திரரின் உருவபொம்மையை தஞ்சையில் மாணவர்கள் எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய நூல் வெளியிட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி … Read more