தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா நாளை முதலமைச்சர் பழனிசாமி முக்கிய ஆலோசனை

இந்தியாவில் கொரனோ வைரஸ் இன் இரண்டாவது அலை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.மகாராஷ்டிரா, பஞ்சாப்,தமிழகம், மற்றும் கர்நாடகா உட்பட சில மாநிலங்களில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பரவி வரும் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்த பிரதமர் மோடி தலைமையில் அனைத்து முதல் அமைச்சர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் 2 நாட்களுக்கு முன்னர் … Read more

முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு நேரடி குடிநீர் திட்டம் – அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

முல்லை பெரியாறு அணையில் இருந்து நேரடியாக மதுரைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். மதுரையில் இன்று 69.11 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்துள்ள தமிழக முதல்வர், 3.95 கோடி மதிப்பிலான இரண்டாயிரத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று கட்டிடங்களை திறந்து வைத்த பின்பு, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் திட்டத்துக்கும் … Read more

என் உயிருக்கு ஆபத்து- முதல்வரிடம் உதவி கேட்ட சீனு ராமசாமி..!

இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம். என்று திடீரென ட்வீட் ஒன்றை செய்துள்ளார். என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம். — R.Seenu Ramasamy (@seenuramasamy) October 28, 2020

பள்ளிகள் திறப்பு : முதல்வர் அறிவிப்பார் ஆனால், சாத்தியக்கூறு இப்பொழுது இல்லை!

பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார் ஆனால், அதற்கான சாத்தியக்கூறு இப்பொழுது இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் தீவிரமடைந்து கொண்டே செல்வதால் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு தற்பொழுது வரை அமல்படுத்தப்பட்ட நிலையில் தான் உள்ளது. தளர்வுகளை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தான் அரசு அறிவித்து இருக்கிறது. இருப்பினும், பள்ளிகள் திறப்பது குறித்து தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் தனியார் பள்ளிகள் சில உயர் நீதிமன்றத்தில் … Read more

#Breaking-தூத்துக்குடி பயணம்- முதல்வர் வருகை ரத்து???

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தூத்துக்குடி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயி சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. முதல்வர் பழனிசாமி தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். முதல்வரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், உறவினர்கள், அதிகாரிகளும் நேரில் சென்று  அஞ்சலி செலுத்தினார்கள். மறைந்த தவுசாயம்மாளுக்கு முதல்வர் பழனிசாமியுடன் கோவிந்தராஜ் என்கிற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  … Read more

இன்று 9,000கோடி ஒப்பந்தம்..கால்பதிக்கிறதா?? பிரிட்டானியா-அப்போலோ-ஐநாக்ஸ் நிறுவனங்கள்!?

 புதிதாக 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய வகைசெய்யும் தமிழக அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தம்   இன்று கையெழுத்தாகிறது. தமிழக அரசு, பொருளாதாரத்தை மீட்க   பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குஇதில் றிப்பாக, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அவ்வாறு குறிப்பாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, வெளிநாட்டு துாதர்கள் உடன் சந்திப்பு மற்றும் சிறப்பு பணிக்குழு அமைத்து பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய, அழைப்பு விடுத்தும், … Read more

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வி தான், இல்லாத ஒன்றிற்கு இருவர் சண்டை போடுகிறார்கள் – முத்தரசன்!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு தோல்வி தான், இல்லாத ஒன்றிற்கு இருவர் சண்டை போடுகிறார்கள் என முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் முத்தரசன் அவர்கள் நேற்று தஞ்சையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த போது அளித்த பேட்டியில், உத்தரபிரதேசத்தில் தலித் இளம்பெண் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு பிரதமரும் முதல்வரும் மௌனம் காப்பது கண்டனத்துக்கு உரியது எனவும், பெரும்பான்மையுடன் இருக்கக்கூடிய காரணத்தால் பாஜக ஆணவத்துடன் நடந்து கொள்வது ஜனநாயகத்திற்கு நல்லது இல்லை எனவும் … Read more

மகிழ்ச்சியுடன் தான் அறிவித்துள்ளேன், எதிர்க்கட்சிகளின் ஆசை பலிக்காது -ஓ.பி.எஸ்!

மகிழ்ச்சியுடன் தான் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளேன், எதிர்க்கட்சிகளின் ஆசை பலிக்காது என ஓ.பி.எஸ் கூறியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் எனும் போட்டிகள் மற்றும் சர்ச்சைகள் எழுந்து வந்தது. இந்நிலையில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் ஆன கேபி முனுசாமி அவர்கள் விரைவில் அதிமுகவின் வழிகாட்டுதல்படி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பார் என கூறியிருந்தார். இந்நிலையில் இன்று முதல்வர் வேட்பாளர் யார் … Read more

பகுதிநேரமாக 7,700 ரூபாய் சம்பளம் பெற்று பணி செய்யும் 12,000 ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர கொடுக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி!

பகுதிநேரமாக குறைந்த சம்பளத்தில் பணி செய்யும் ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர்களை பணி நிரந்தரம் செய்யாமால், மாத சம்பளம், போனஸ், வருடாந்திர ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, இறந்தவர் குடும்பநல நிதி … Read more

முதலமைச்சர் பழனிச்சாமி நாமக்கல் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம்

இன்று முதலமைச்சர் பழனிச்சாமி நாமக்கல் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பே அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பயணத்தில் மாவட்ட ஆட்சியர்கள் ,அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.மேலும் திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.நேற்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி  ஆய்வு மேற்கொண்டார். அங்கு … Read more