புதிய சுகாதார துறை அமைச்சரின் முதல் பணி இது தான் – ப.சிதம்பரம்

தடுப்பூசிகளை எவ்வித இடையூறுமின்றி வழங்குவதை உறுதி செய்வதே புதிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் முதல் பணியாக இருக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷவர்தன் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய சுகாதாரத்துறை அமைச்சராக மன்சுக் மாண்டவியா பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், தடுப்பூசி இல்லாத காரணத்தினால் … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்களை தெரிவித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்….!

தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கைகளை மரியாதையாக ஆனால் உறுதியாக முன் வைத்த முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 2 நாள் அரசுமுறை பயணமாக, சென்னையில் இருந்து நேற்று காலை தனி விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். இதனையடுத்து,நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த அவர், தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் வழங்கி உள்ளார். இந்நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காங்கிரஸ் … Read more

மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை..! – ப.சிதம்பரம்

மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஸ்வர்தனை விமர்சித்த ப.சிதம்பரம். மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா? இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், சில மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடுகள் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு … Read more

ஏழைகளை பற்றி கவலைப்படாத மனிதாபிமானமில்லாத அரசு?! – டிவிட்டரில் ப.சிதம்பரம் சாடல்.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தினசரி வேலை செய்பவர்கள், கட்டட வேலை செய்பவர்கள் என பலரும் இதனால்  தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்படுகின்றனர்.    இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவ வருகிறது. இந்நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து தமிழில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.    அதில், ‘ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஏழைகளின் வாழ்வாதாரம் முடங்கிவிட்டது. அவர்களுக்கு நாள் ஊதியமோ வருமானமோ கிடையாது    … Read more

சிறுசேமிப்பு வட்டி விகிதத்தை குறைத்த மத்திய அரசின் முடிவு தவறு.! – ப.சிதம்பரம் கருத்து

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டில் அத்தியாவசிய தேவைகளுக்காக இயங்கும் தொழில் நிறுவனங்கள் தவிர மற்றவை இயங்கவில்லை. இதனால் நாட்டில் பொருளாதார மந்த நிலை உருவாகும் சூழல் வந்துவிட்டது.  இதனை அடுத்து மத்திய அரசானது, சிறுசேமிப்பு மற்றும் தொழிலாளர் வைப்பு நிதியின் வட்டிவிகிதத்தை குறைப்பதக்க அறிவித்தது.  இந்த முடிவு குறித்து, முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். … Read more

ப.சிதம்பரத்தின் நீண்ட வருட உதவியாளரிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை!

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில்  முன்னாள் நீதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தற்போது திகார் சிறையில் உள்ளார். அவர் இன்று முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்நிலையில் சிபிஐ தனது அடுத்த கட்ட விசாரணைக்காக ப.சிதம்பரத்திடம் உதவியாளராக நீண்ட காலம் பணியாற்றிய கே.வி.பெருமாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் டெல்லியில் வசித்து வருகிறார். இவரிடம், கார்த்திக் சிதம்பரம் உடனான தொடர்பில் இருந்தாரா, இந்திராணி முகர்ஜி உடனான தொடர்பில் இருந்தாரா என … Read more

சிறையில் இருக்கும் ப. சிதம்பரம் டிவிட்டர் பக்கத்தில் இந்திய பொருளாதாரத்தை விமர்சித்து அதிரடி ட்வீட்!

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் முன்னாள்மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தற்போது திகார் சிறையில் உள்ளார். அவர் மீது சிபிஐ விசாரணை நடந்துதி வருகிறது. இன்னும் 8 நாட்கள் திகார் சிறையில் விசாரணைக்கு உட்படுத்த உள்ளார். இந்நிலையில் இன்று அவரது டிவிட்டர் கணக்கில் இருந்து,  ‘வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது , ஊதியம் குறைவாக உள்ளது, முதலீடு குறைவாக உள்ளது, வர்த்தமும் குறைவாக உள்ளது இதனால், ஏழைகளும், நடுத்தர மக்களும்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சரிவில் இருந்து நாட்டை மீட்பதற்கான திட்டம் … Read more

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அவரது மகனும், நாடுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம்  இருவருக்கும் தொடர்ப்பு இருப்பதாக அமலாக்க துறை மற்றும் சிபிஐ தரப்பு இருவரையம் கைது செய்து விசாரிக்க அனுமதி கேட்டு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டிருந்தது. இது தொடர்பாக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு, ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் சார்பில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஓ.என்.சைனி … Read more

ப.சிதம்பரத்தை மேலும் 5 நாள் விசாரணைக்கு எடுக்க சிபிஐ தரப்பு மனு!

ஐஎன்எக்ஸ் நிறுவன முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ப.சிதம்பரம் தற்போது சிபிஐ அதிகாரிகளின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தற்போது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில், மேலும் 5 நாட்களுக்கு ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ப.சிதம்பரத்தை இப்படி கைது செய்தது ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல்! திருமாவளவன் கண்டனம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று இரவு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஐஎன்எக்ஸ் நிறுவன ஊழல் முறைகேடு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், ‘ இது பாஜகவின் பழிவாங்கல் நடவடிக்கை. இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சி, காங்கிரஸ் கட்சியை சீர்குலைக்க இந்த நடவடிக்கைகளை பாஜக அரசு எடுத்துள்ளது. ப.சிதம்பரத்தை கைது செய்ய அவர் வீடு சுவர் ஏறி, கதவை … Read more