கார்த்தி சிதம்பரம் ரூ.2 கோடி செலுத்தி விட்டு வெளிநாடு செல்லலாம்- உச்சநீதிமன்றம் .!

கார்த்தி சிதம்பரம் ரூ.2 கோடி பிணைத்தொகையாக செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கார்த்தி சிதம்பரம் ரூ.2 கோடி … Read more

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் ஆவணங்களை ஒப்படைக்க டெல்லி நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவு.!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் தரப்புக்கு குற்றப்பத்திரிகையுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஒப்படைக்குமாறு டெல்லி நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டது. கடந்த 2007-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டிலிருந்து ரூ.305 கோடி முதலீடு வருவதற்கு மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் வரும் அந்நிய முதலீட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் உதவினார் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் இதை சிபிஐ வழக்குப் … Read more

ப.சிதம்பரத்தின் நீண்ட வருட உதவியாளரிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை!

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில்  முன்னாள் நீதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தற்போது திகார் சிறையில் உள்ளார். அவர் இன்று முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்நிலையில் சிபிஐ தனது அடுத்த கட்ட விசாரணைக்காக ப.சிதம்பரத்திடம் உதவியாளராக நீண்ட காலம் பணியாற்றிய கே.வி.பெருமாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் டெல்லியில் வசித்து வருகிறார். இவரிடம், கார்த்திக் சிதம்பரம் உடனான தொடர்பில் இருந்தாரா, இந்திராணி முகர்ஜி உடனான தொடர்பில் இருந்தாரா என … Read more

சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சி – ராகுல்காந்தி கண்டனம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மனு தள்ளபடி செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. Modi’s Govt is using the ED, CBI & sections of a spineless media to character assassinate Mr Chidambaram. I strongly condemn this disgraceful misuse of power. — Rahul Gandhi (@RahulGandhi) August 21, 2019 இந்த நிலையில் சிதம்பரம் குறித்து … Read more

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த சிதம்பரம் ! சிபிஐ கேவியட் மனு தாக்கல்

ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ  கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.ஆனால் இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா விசாரிக்க மறுப்பு தெரிவித்து தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றுவதாக தெரிவித்தார். ஆனால் தலைமை நீதிபதி அமர்வும் உடனே  … Read more

ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் 4-வது முறையாக வருகை!

ஐஎன்எக்ஸ் நிறுவனம் மீது 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடு முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு  காரணமாக முன்ஜாமீன் கேட்டு, நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர்.ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ தரப்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.ஆனால் ப.சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் நேற்று முதல்  ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வீட்டிற்கு … Read more

ரூ.22.28 கோடி சொத்துகள் முடக்கம் !புதிய செய்தி அல்ல, 6 மாதங்களுக்கு முன்பே பிறப்பித்த உத்தரவு!கார்த்தி சிதம்பரம் தரப்பு விளக்கம்

எனது சொத்துகள் முடக்கப்பட்டது புதிய செய்தி அல்ல என்று கார்த்தி சிதம்பரம் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.  ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லாச் சான்று பெற்றுத் தருவதாக சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதேபோல் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. சிவகங்கை மக்களவைத் தொகுதியில்  காங்கிரஸ் … Read more

கார்த்தி சிதம்பரத்தின் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. கார்த்திக் சிதம்பரத்தை ஜாமீனில் வெளியிட்டால் தடயங்களை அழிக்க முயற்சி செய்வார் என சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கார்த்தி சிதம்பரம் ஆவணங்கள்,ஆதாரங்கள், சாட்சிகளை அழிக்க முற்பட்டார் என்று சி.பி.ஐ. நிரூபித்தால், ஜாமின் மனுவை திரும்ப்பெற தயார் என கார்த்தி சிதம்பரம் தரப்பு வாதிட்டது. கார்த்தி சிதம்பரம் தன் மீதான குற்றச்சாட்டுக்கான முக்கிய ஆதாரங்களை அழித்துள்ளார். மேலும் விசாரணையின் போதும் … Read more

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் எதிர்ப்பு ,ட்விட்டர் பதிவை நீக்கிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி…!!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்தய நிதியமைச்சரும்,காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 20ம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து கடந்த 9ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவினை விமர்சித்து துக்ளக் இதழின் ஆசிரியரும் பிரபல ஆடிட்டருமான குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து … Read more