ராகுல்காந்திக்கு என்னதான் பிரச்சனை…? – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

ராகுல் காந்தியின் ட்வீட்டர் பதிவிற்கு பதிலடி கொடுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன். காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் கொரோனா தொற்று விவகாரத்தில் மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதிலும் மத்திய அரசின்  தடுப்பூசி கொள்கை குறித்து விமர்சித்து வரும் ராகுல் காந்தி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜூலை வந்துவிட்டது. தடுப்பூசி வரவில்லை. எங்கே தடுப்பூசி?’ என்று பதிவிட்டிருந்தார். இதனையடுத்து ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் … Read more

இன்னும் கொரோனா இரண்டாம் அலை முடிவடையவில்லை – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

இன்னும் கொரோனா இரண்டாம் அலை முடியவில்லை எனவே நாங்கள் ஓய்வெடுக்க முடியாது என மத்திய சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று கடந்த ஒன்றரை வருட காலங்களாக அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது கொரோனாவின் பாதிப்புகள் குறைவதும் அதிகரிப்பதும் வழக்கமாக நடந்து கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா இரண்டாம் அலை உருவாகி அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் ஒகொரோனா இரண்டாம் அலை … Read more

மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை..! – ப.சிதம்பரம்

மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஸ்வர்தனை விமர்சித்த ப.சிதம்பரம். மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா? இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், சில மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடுகள் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு … Read more

இந்தியாவில் கருப்பு பூஞ்சையால் 28,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

இந்தியாவில் இதுவரை கருப்பு பூஞ்சையால் 28,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு. கருப்பு பூஞ்சை பதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளதாக தகவல்  நாடு முழுவதும் கொரோனா வைரஸால் அதிகளவிலான பாதிப்புகள் உருவாகியுள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மிகப்பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில், இதுவரை இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்றால் 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துணி அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து காணொலி … Read more

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு எந்த அறிகுறியும் இல்லாவிட்டால் மீண்டும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டாம் – இந்திய சுகாதார அமைச்சகம்!

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு பத்து நாட்களுக்கு பின்பு எந்த ஒரு அறிகுறியும் இல்லாவிட்டால் மீண்டும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டாம் என இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி சுமை மிகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் கொரோனா நோயாளிகளுக்கான திருத்தப்பட்ட சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளது என வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள … Read more

நாளை மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை…!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சுகாதார துறை அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை. சமீப நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகம், மஹாராஷ்டிரா, கர்நாடகம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சுகாதார துறை அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை  மேற்கொள்ளவுள்ளார்.

ஒரே நாளில் கொரோனா தடுப்பூசிக்கு லட்சக்கணக்கில் முன்பதிவு – மத்திய அமைச்சர்

நேற்று ஒரே நாளில் 26 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில், கோவாக்சின் மற்றும் கோவீஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு போன்ற பிரபலங்கள் தடுப்பூசி … Read more

கொரோனா தடுப்பூசியால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி இந்தியாவில் கண்டறியப்பட்டு, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் முதல்கட்டமாக முன்களப்பணியாளர்கள் தடுப்பூசியை போட்டு கொண்டிருக்கின்றார்கள். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள முன்கள பணியாளர்கள் இந்த தடுப்பூசியை எடுத்து கொண்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்து சில வதந்திகளும் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து … Read more

கடந்த 7 நாட்களில் 188 மாவட்டங்களில் புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் இல்லை – மத்திய சுகாதார துறை அமைச்சர்!

கடந்த 7 நாட்களில் இந்தியா முழுவதிலும் 188 மாவட்டங்களில் புதியதாக கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருட காலமாக உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு வந்த நிலையில், தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி கொடுக்கப்பட்டு உள்ள நிலையில், முதல்கட்டமாக முன் களப் பணியாளர்களுக்கு … Read more

தடுப்பூசி என்பது கொரோனாவுக்கான கல்லறை பெட்டியில் இறுதியாக அடிக்கப்படும் ஆணி – மத்திய அமைச்சர்

தடுப்பூசி என்பது கொரோனாவுக்கு கல்லறை பெட்டியில் இறுதியாக அடிக்கப்படும் ஆணி மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.  கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனா வைரஸ் ஆனது இந்த உலகையே உலுக்கி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸை அழிப்பதற்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியது. தற்போது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பல நாடுகளில் இந்த மருந்துகள் மக்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் இந்தத் தடுப்பூசி … Read more