உலகின் முதலில் நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது..!

இந்தியாவில் புத்தாண்டு தொடங்க இன்னும் சில மணிநேரங்களே உள்ளன, ஆனால் உலகின் சில பகுதிகளில் புத்தாண்டு ஏற்கனவே தொடங்கிவிட்டது. நியூசிலாந்தில் முதலில் புத்தாண்டு தொடங்கியுள்ளதால், ஆக்லாந்து நகரில் புத்தாண்டை வரவேற்று அங்குள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர். நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் புத்தாண்டு பிறந்ததை தொடர்ந்து வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

2024 புத்தாண்டு கொண்டாட்டம் – வழிகாட்டு நெறிமுறைகள்!

New Year Celebration Chennai

2023 வருடம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், மக்கள் அனைவரும் 2024-ஐ வரவேற்கத் தயாராகிவிட்டனர். அந்த வகையில், தலைநகர் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் எப்போதுமே களைகட்டும் என்பதால் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை மாநகரக் காவல் ஆணையர், கொண்டாட்டத்துக்கான விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளார். வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் போட்டியில்,  பைக் ரேஸில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் மீதான … Read more

புத்தாண்டு, பொங்கல் விற்பனை கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி..!

புத்தாண்டு, பொங்கல் விற்பனை கண்காட்சியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.  புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் விற்பனை கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியை அமைச்சர் உதயநிதி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் மகளீர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும்  கைவினைப் பொருட்கள், மண்பாண்டங்கள், பனை ஓலை பொருட்கள் இடம்பெற்றுள்ளது. வரும் 12ஆம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியை காண பொதுமக்களுக்கு இலவசமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மக்களவை குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.!

மக்களவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  மக்களவை கூட்டத்தொடர், அடுத்த வாரம் நிறைவடைய இருந்த நிலையில், 4 நாட்களுக்கு முன்னதாக இன்று அலுவல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள், கிறிஸ்த்துமஸ் – புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு முன்கூட்டியே விடுமுறை அளிக்க கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தற்போது மக்களவை தேதி குறிப்பிடாமல் தற்போது முடித்துவைக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

“10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவின் முதல் ஆங்கிலப் புத்தாண்டு…என்னை நேரில் சந்திக்க வேண்டாம்” – முதல்வர் ஸ்டாலின் அன்பு வேண்டுகோள்!

சென்னை:10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல் ஆங்கிலப் புத்தாண்டு என்றாலும்,ஜனவரி 1 ஆம் தேதியன்று திமுக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் தன்னைச் சந்திப்பதற்காக நேரில் வருவதைக் கண்டிப்பாக முற்றிலும் தவிர்க்குமாறும்,அதுவே தனக்கு வழங்குகிற சிறப்பான புத்தாண்டுப் பரிசாகும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா நோய்த் தொற்றின் புதிய வடிவான ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருப்பதால்,ஜனவரி 1 ஆம் தேதியன்று திமுக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் தன்னைச் சந்திப்பதற்காக நேரில் … Read more

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படுமா …?

முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய ஓமைக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் … Read more

2021 New Year Eve: 2020-க்கு “குட் பை” சொல்லி, 2021-ஐ வரவேற்கும் கூகுள்!

கூகுள் நிறுவனம், ஒவ்வொரு முக்கிய தினத்தன்று தனது டூடுலை மாற்றுவது வழக்கம். அந்தவகையில், 2021 ஆம் ஆண்டு பிறக்கவுள்ளதால் புதிய அனிமேஷன் டூடுலை உருவாக்கியுள்ளது. 2020 என்பது பலருக்கும் மறக்க முடியாத வருடமாகும். ஆனால் தற்பொழுது இந்த 2020 முடிவடைய இன்னும் சில மணிநேரங்கள் இருக்கவுள்ளதால், உலகின் மிகப்பெரிய சேர்ச் என்ஜினான கூகுள், 2021 பிறக்கவுள்ளதையடுத்து புதிய டூடுலை உருவாக்கியது. அதற்கு புத்தாண்டு ஈவ் 2020 (New Year’s Eve) என பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி நீங்கள் google.com … Read more

புத்தாண்டு கொண்டாட்டம்: கடும் கட்டுப்பாடுகளை விதித்த கேரள அரசு!

கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களை இன்று இரவு 10 மணிக்குள் முடித்துக்கொள்ளுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவும் அச்சம் காரணமாகவும், உருமாறிய கொரோனா வைரஸ் பரவ அதிகளவில் வாய்ப்புள்ளதாக பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கும்படி மத்திய அரசு, மாநில அரசுக்கு அறிவித்தது. தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தியது. இந்நிலையில், கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேராவில் பொதுமக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், … Read more

நொய்டா புத்தாண்டு கொண்டாட்டம் – ஒரே இடத்தில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி!

நொய்டாவில் வரவிருக்கின்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஒரே இடத்தில் 100 பேர் மட்டுமே பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் முன்பதிவுடன் கூடலாம் என அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருட காலமாக உலகில் உள்ள அனைத்து மக்களுமே தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்பொழுது வரையிலும் இந்த கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், பண்டிகை காலங்களில் மக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு அரசாங்கம் சில தளர்வுகளை கொடுத்து வந்தாலும் கொரோனா வைரஸ் … Read more

புத்தாண்டுக்கு புதுச்சேரியில் சமூக இடைவெளியுடன் அனுமதி!

வரவிருக்கின்ற புத்தாண்டு கொண்டாட்டத்தை மக்கள் சமூக இடைவெளியுடன் கொண்டாட அனுமதி வழங்கப்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் என்று தெரிவித்துள்ளார். ஒரு வருட காலமாக உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸின் தாக்கம் இந்தியாவில் தற்போது குறைந்து கொண்டு வந்தாலும், மீண்டும் வீரியமுள்ள கொரோனா வைரஸ் பரவுவதாக கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பல இடங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு தற்பொழுது வரை அமலில் இருந்தாலும், மக்களுக்காக அரசு அவ்வப்போது சில … Read more