பத்திரிக்கைக்கு கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் உலகநாயகன் மகள்

உலகநாயகனின் மகளும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முன்னணி ஹீரோயினாக இருப்பவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் கவர்ச்சியாக நடிப்பதில் பேர் போனவர். இவர் அவ்வபோது கவர்ச்சியான படங்களை கசிய விட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துபவர். அண்மையில் பெமினா என்ற பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்த இவர் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து போஸ் கொடுத்திருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். source : dinasuvadu.com

நடிகர் கமல்ஹாசன் தமிழக மக்களுக்கு ட்விட்டரில் தெரிவித்த பொங்கல் வாழ்த்து…!!

நடிகர் கமல்ஹாசன் தமிழக மக்கள் “அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு” என தனது பதிவிட்டு ட்விட்டரின் மூலமாக பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு. — Kamal Haasan (@ikamalhaasan) January 13, 2018

அரசியலில் யாருக்கு தன்னுடைய ஆதரவு-வெளிப்படையாக கூறிய பிரபல இயக்குனர்…!!

  நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து, யாருக்கு சினிமா பிரபலங்கள் தங்களது ஆதரவினை அளிப்பார்கள் என்பது தான் மிக பெரிய கேள்வியாக உள்ளது. இந்நிலையில் தற்போது இயக்குனர் சுந்தர்.சியிடம் செய்தியாளர்கள் “உங்கள் ஆதரவு யாருக்கு..? ” என கேட்டுள்ளனர். அதற்கு”என் ஆதரவு முழுக்க முழுக்க ரஜினிக்கு தான்” என அவர் பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, கமல் குறித்து கவிஞர் வைரமுத்து, அப்படி என்னதான் சொன்னார் அவர்…??

  திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவரிடம் நிரூபர்கள் ரஜினியின் அரசியல் வருகை அறிவிப்பு, கமலின் ட்விட்டர் பதிவுகள் குறித்து கேள்விகளை கேட்டுள்ளனர். அதற்கு அவர் கூறுகையில், “இருவரும் எனது நண்பர்கள், மேலும் இருவரும் எனது இரண்டு கண்கள் போன்றவர்கள். அவர்களை பற்றி கருத்து கூற அவகாசமான காலம் இல்லை. இன்னும் காலம் வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் நடந்த கலைநிகழ்ச்சியில் பிரபலங்களுக்கு நடந்த அவமானம். அப்படி என்னத்தான் நடந்தது அங்கு…??

    மலேசியாவில் கோலாகலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் எல்லோரும் சேர்ந்து நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும், புகைப்படங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு வந்த 130 பிரபலங்கள் அவமானப்படுத்தப்பட்டு விமான நிலையம் வந்தும், திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்நிகழ்ச்சி நடிகை ராதிகாவுக்கும், சரத்குமாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்று ஏற்கெனவே தகவல் வந்தது. அதோடு நேற்று எஸ்.வி. சேகரும் தனது டிவிட்டர் பக்கத்தில் “விஜயகாந்த் நடிகர் … Read more

நடிகர் சங்கத்துக்கு பணம் கொடுத்த சரவணா ஸ்டோர் உரிமையாளர்

  நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் ஒரு கட்டடம் கட்டப்பட இருக்கிறது. அதற்காக பணம் சேகரிக்கும் முயற்சியில் நடிகர் சங்கம் குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.தற்போது நட்சத்திர கலைவிழா மலேசியாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் ரஜினி, கமல், சூர்யா, விஷால் என பல நடிகர்கள், நடிகைகள் பங்குபெற்றுள்ளனர்.இந்த நிலையில் நடிகர் சங்கத்திற்கு சரவணா ஸ்டோர்ஸ் சார்பாக ரூ. 2.5 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.நடிகர்களை தாண்டி இந்த நிகழ்ச்சியில் அவரும் பங்குபெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழாவின் லேட்டஸ்ட் அப்டேட்…!!

நடிகர் சங்கம் கட்டிட நிதிக்காக மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா நடக்கிறது. இதற்காக ஒட்டுமொத்த திரையுலகமும் வந்துள்ளது. ரஜினியும், கமலும் கலந்துகொள்ள வந்துள்ளனர்.இதனால் மலேசியா விழாக்கோலம் பூண்டுள்ளது… அந்நிகழ்ச்சியின் புகைப்படங்கள் உங்களுக்காக:                              

டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்- உலகநாயகன் கமல்

ஆர்கே நகர் தேர்தலில் தினகரன் வெற்றியை பற்றி நடிகர் கமல்ஹாசன் ,தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.. இதற்கு தினகரன் வழக்கு தொடரப்போவதாக கூறியுள்ளார்.. இது தொடர்பாக பேட்டி அளித்த கமல், வழக்கை சந்திக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்..