எனக்கு ஒரு வயது தான் ஆகிறது – வேடிக்கையான காரணம் கூறும் நடிகர் ஆரி!

ஆடும் கூத்து எனும் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகர் தான் ஆரி. இவர் அதனை தொடர்ந்தும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். பல சிறந்த நடிகருக்கான விருதுகளும் பெற்றவர் இவர். இந்நிலையில் அண்மையில் ஆரி எனும் இவரது பெயரை ஆரி அர்ஜுனா என இவர் மாற்றிக் கொண்டார். இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு … Read more

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விவேக்!

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். விவேக்கை பொறுத்தவரையில், சினிமாவின் மீது மட்டுமே தனது கவனத்தை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வளம் வருகிறார். இந்நிலையில், தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும், ரஜினிகாந்த் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளார். இதனையடுத்து விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ நீ உண்மையில் கடவுளுக்கு சேவை செய்ய … Read more

ரூ 31.15 கோடி செலவில் மீனவ இளைஞர்களுக்கு  நடமாடும் மீன் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்படும்-முதலமைச்சர் பழனிச்சாமி  அறிவிப்பு

பேரவையில் முதலமைச்சர் பழனிச்சாமி  அறிவிப்புகளை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில், கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் ரூ 31.15 கோடி செலவில் மீனவ இளைஞர்களுக்கு  நடமாடும் மீன் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்படும் . முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தின் கீழ் ஊரக மற்றும் நகராட்சி அதிகாரிகள் குழு, கிராமங்களுக்கு நேரடியாக சென்று மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுவார்கள்.பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீர்வு எட்டப்படும். இந்த சிறப்பு சிறப்பு குறை தீர்வு திட்டம் ஆகஸ்ட், செப்டம்பர் … Read more

மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவல்லிக்கேணியில் காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,தமிழகத்தில்  உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று இந்நாளில் உறுதி ஏற்கிறேன்.இந்தியை திணிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது, பின்னர் அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 28-ஆம் தேதி!!இன்று தேசிய அறிவியல் நாள்!!

தேசிய அறிவியல் நாள் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய அறிவியல் நாள் இந்தியாவில் பிப்ரவரி 28-ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. சர். சி.வி. ராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்த நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் 1930ஆம் ஆண்டு இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு … Read more

இந்தியா – சவுதி அரேபியா  இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!!

சவுதி இளவரசர் முகமது பின் சல்மா இந்தியா வந்துள்ளார்.  இந்தியா – சவுதி அரேபியா  இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்தியா, சவுதி இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது  என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  சவுதி இளவரசர் முகமது பின் சல்மா இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அதில் இந்தியா – சவுதி அரேபியா  இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. டெல்லியில் பிரதமர் நரேந்திர  மோடி மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் … Read more

கஜா புயல்:ரயில்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் எடுத்துச் செல்ல அடுத்த 15 நாட்களுக்கு சரக்கு கட்டணம் விலக்கு …!

கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, ரயில்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் எடுத்துச் செல்ல அடுத்த 15 நாட்களுக்கு சரக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். கஜா புயலால் … Read more

6000 விவசாய மின் இணைப்புகளுக்கு ஒரு வாரத்தில் மின்சாரம் வழங்கிவிடுவோம்…! அமைச்சர் தங்கமணி

6000 விவசாய மின் இணைப்புகளுக்கு ஒரு வாரத்தில் மின்சாரம் வழங்கிவிடுவோம் என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக   அமைச்சர் தங்கமணி  கூறுகையில், கஜா புயல் பாதிக்கப்பட்டுள்ள 6000 விவசாய மின் இணைப்புகளுக்கு ஒரு வாரத்தில் மின்சாரம் வழங்கிவிடுவோம்.அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்த வேண்டும் என போராடுபவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது எங்களுக்கு தெரியும்  என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கஜா புயல் பாதிப்பு:பட்டா இருந்தாலும், இல்லாவிட்டாலும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்…! துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு

கஜா புயல் பாதித்த பகுதிகளில் பட்டா இருந்தாலும், இல்லாவிட்டாலும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர்,புதுக்கோட்டை ,திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல்  புதுக்கோட்டை ,நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு … Read more

திருவாரூர் இடைத்தேர்தல்: தள்ளிவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு…!

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கருணாநிதி  மறைவால் காலியான  திருவாரூர் தொகுதி: திருவாரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக இறந்தார்.இந்நிலையில் அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் சூழ்நிலை இருந்தது. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு :   பின்  ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.   தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் … Read more