பொறியியல் மாணவர்களே ரெடியா? – அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!

பொறியியல் கல்லூரிகளுக்கு டிச.8 முதல் செமஸ்டர் தொடங்குகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு டிசம்பர் 8-ஆம் தேதி முதல் செமஸ்டர் தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி

குரூப் II, II A தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கானத் தேர்வு-II/IIA (தொகுதி-II/IIA) இதற்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. மேற்படி வழக்குகளில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறுகட்ட கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. … Read more

இனிமேல் இந்த தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்…!

நவம்பர் 2 & 13-ம் தேதி நடைபெறும் தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பதவிகளுக்கான தேர்வு மையம் குறைப்பு.  நவம்பர் 2 & 13-ம் தேதி நடைபெறும் தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பதவிகளுக்கான தேர்வு மையம் குறைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ’17/2022, நாள் 28.07.2022-ல் தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர் (மருத்துவ கல்வித் துறை) மற்றும் தமிழ்நாடு வழித் தேர்வு 12.11.2022 (மு.ப மற்றும் … Read more

இந்த போட்டி தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…! வாய்ப்பை தவற விடாதீர்கள்..!

எஸ்.எஸ்.சி போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள்.  மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு B மற்றும் C பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. அதன் படி இந்த ஆண்டு 20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், எஸ்.எஸ்.சி தேர்வில் Group B மற்றும் Cக்கான பல்வேறு அமைச்சகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப … Read more

மாதந்தோறும் 1500 ரூபாய்… அக்.15 -ல் இவர்களுக்கு தமிழ் மொழி திறனறிவுத் தேர்வு!

அக்டோபர் 15 -ல் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு. இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்படும் 1,500 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வானது அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான கேள்விகள் பத்தாம் … Read more

#BREAKING: இதற்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. அடுத்த மாதம் முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு..

முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என யுஜிசி தலைவர் அறிவிப்பு. இரண்டாம் கட்ட CUET – UG தேர்வுக்கான ஹால் டிக்கெட் https://cuet.samarth.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வரும் 4,5,6 தேதிகளில் CUET – UG 2-ம் கட்ட தேர்வு நடைபெற உள்ள நிலையில், 6.80 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். மேலும், முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவித்துள்ளார். பொதுப் பல்கலைக்கழக … Read more

#BREAKING : CBSE 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு..!

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு.  இன்று காலை சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.  இதனை தொடர்ந்து தற்போது, சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள், http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

#BREAKING: மாணவர்கள் கவனத்திற்கு.. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு முடிவு வெளியீடு 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு. தமிழகத்தில் 10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி நாளை (ஜூன் 17 ஆம் தேதி) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 23-ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்து அரசுத் … Read more

மாணவர்களே ரெடியா? 10, 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம். தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. 17 லட்சம் மாணவர்கள் எழுதிய 1.87 கோடி விடைத்தாள்கள் இன்று முதல் வரும் 8-ஆம் தேதி வரை திருத்தும் பணி நடைபெறுகிறது. இதனிடையே, தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 23ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முன்தினமும் முடிவடைந்தது. … Read more

தேர்வர்களே!குரூப்2&2ஏ உத்தேச விடைகள் வெளியீடு;ஜூன் 3-க்குள் இதனை தெரிவிக்கலாம் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

தமிழகத்தில் குரூப் 2 குரூப் 2ஏ-இல் 5,529 காலிப்பணியிடங்களுக்கு 6.82 லட்சம் பெண்கள் உள்பட மொத்தம் 11.78 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.இதனையடுது,கடந்த மே 21 ஆம் தேதி குரூப் 2, 2ஏ தேர்வு 4,012 தேர்வு மையங்களில்  நடைபெற்ற நிலையில், இத்தேர்வுகளை சுமார் 84.44% பேர் மட்டுமே எழுதினர் என TNPSC தெரிவித்திருந்தது. குரூப் 2, 2ஏ தேர்வு எழுத 11,78,163 பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்த நிலையில், 9,94,878 பேர் ( … Read more