மாதந்தோறும் 1500 ரூபாய்… அக்.15 -ல் இவர்களுக்கு தமிழ் மொழி திறனறிவுத் தேர்வு!

அக்டோபர் 15 -ல் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு.

இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்படும் 1,500 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வானது அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான கேள்விகள் பத்தாம் வகுப்பு பாட திட்டத்தின் படி, கொள்குறி வகையில் வடிவமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment