தேர்வர்களே!குரூப்2&2ஏ உத்தேச விடைகள் வெளியீடு;ஜூன் 3-க்குள் இதனை தெரிவிக்கலாம் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

தமிழகத்தில் குரூப் 2 குரூப் 2ஏ-இல் 5,529 காலிப்பணியிடங்களுக்கு 6.82 லட்சம் பெண்கள் உள்பட மொத்தம் 11.78 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.இதனையடுது,கடந்த மே 21 ஆம் தேதி குரூப் 2, 2ஏ தேர்வு 4,012 தேர்வு மையங்களில்  நடைபெற்ற நிலையில், இத்தேர்வுகளை சுமார் 84.44% பேர் மட்டுமே எழுதினர் என TNPSC தெரிவித்திருந்தது.

குரூப் 2, 2ஏ தேர்வு எழுத 11,78,163 பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்த நிலையில், 9,94,878 பேர் ( 84.44% ) மட்டுமே தேர்வில் பங்கேற்றனர் என்றும் தேர்வுக்காக ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்தவர்களில் 1,83,285 பேர் தேர்வு எழுதவில்லை எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் பாலசந்திரன் முன்னதாக தகவல் தெரிவித்திருந்தார்.மேலும்,குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள், வருகின்ற ஜூன் மாதம் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,குரூப் 2, 2ஏ தேர்வுக்கான உத்தேச விடைகள் அதிகாரப்பூர்வமாக  https://www.tnpsc.gov.in/  என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில்  வெளியாகியுள்ளது. குறிப்பாக,உத்தேச விடைக்குறிப்பில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின்,வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள், இணையத்தின் வாயிலாக தெரிவிக்கலாம் என்று TNPSC நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Comment