இதை செய்தால் ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம் – டெல்லி போக்குவரத்துத்துறை உத்தரவு!

பேருந்துகளை சாலையில் அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட பாதையில் ஓட்டாத ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம். பேருந்துகளை சாலையில் அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட பாதையில் ஓட்டாத ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதே தவறை இரண்டாவது முறையாக தவறு செய்தால் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். மூன்றாவது முறையாக தவறு செய்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். 4-வது முறையாக விதிமீறல் செய்தால், தனியார் பேருந்துகளின் அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை … Read more

பேருந்திலிருந்து மூதாட்டியை இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் …!

பேருந்திலிருந்து மூதாட்டியை இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளைச்சலில் மீன் விற்பனை செய்து வரக்கூடிய செல்வம் எனும் மூதாட்டி மீன் விற்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக வானியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது மூதாட்டியின் உடலில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பேருந்து நடத்துனர் அவரை கீழே இறங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மூதாட்டி அந்த பேருந்து நிலையத்தில் நின்று அழுது கூச்சலிட்டுள்ளார். தான் நடந்து சென்று வீட்டை … Read more

பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு மாரடைப்பு..!-பயணிகளை காப்பாற்றிய பிறகு உயிரிழப்பு..!

ஈரோடு மாவட்டத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் பயணிகளை காப்பாற்றிய பிறகு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மணியன் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது வயது 52. இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று இவர் கவுந்தபாடியிலிருந்து பெருந்துறைக்கு பேருந்தில் பயணிகளோடு புறப்பட்டுள்ளார். சென்று கொண்டிருக்கும் பொழுது வெள்ளாங்கோயில் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் பேருந்தை இயக்கும் பொழுது அவருக்கு … Read more

உயிருக்கு போராடிய கேரள ஓட்டுநர்…! முதலுதவி செய்து சுவாசத்தை மீட்ட தமிழக காவல்துறை..!

உயிருக்கு போராடிய கேரளா ஓட்டுநரை, முதலுதவி செய்து உயிரை காப்பாற்றிய காவல்துறை அதிகாரிகள். நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளாவுக்கு ஒரு மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. கேரளா எல்லையான கீழ்நாடுகாணி அருகே இரண்டாவது வளைவு சாலையில் வந்தபோது, மினி லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது. இதில் அந்த லாரியை ஓட்டி வந்த அபிலாஷ் என்ற ஓட்டுநர் சுயநினைவு இழந்து உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்துள்ளார். இந்த நிலையில், நீலகிரி மாவட்ட கியூ பிரிவு … Read more

உறங்கிக் கொண்டு பயணித்த படியே கார் டிரைவரின் கழுத்தை நெரித்த பெண்மணி!

அமெரிக்காவில் உறங்கிக் கொண்டு பயணித்தபடியே கால் டாக்சி டிரைவரின் கழுத்தை நெறித்து நெஞ்சைக் கீறிய பெண்மணி. அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்த 55 வயதுடைய பெண்மணி ஒருவர் கார் ஒன்றை முன்பதிவு செய்து உள்ளார். உபேர் கார் டிரைவரான 22 வயதுடைய இளைஞர் ஒருவர் பெண்மணியை ஏற்றுவதற்காக வந்துள்ளார். அதன்பின் இருவரும் பயணித்துக்கொண்டிருந்த போதே இடையிலேயே அந்தப் பெண்மணி திடீரென கார் டிரைவரின் கழுத்தை நெரித்து மார்பிலும் கழுத்திலும் நகத்தை வைத்து கீற ஆரம்பித்துள்ளார். என்ன செய்வதென்று … Read more

பஸ் ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் – போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர்

பேருந்துகளில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர்கள் தடுப்பூசி கட்டாயம் போடவேண்டும் என போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை. சென்னை மாநகர பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 33 போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளர்களுக்கு மேலாண் இயக்குநர் (பொறுப்பு) இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பொதுமக்களுடன் தொடர்பில் இருப்பதால் 45 வயதிற்கு மேற்பட்ட ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சிறப்பு விடுப்பு அளிக்காத சூழல் … Read more

ஆப்கனிஸ்தான் பத்திரிகையாளர் மற்றும் ஓட்டுநர் சுட்டு கொலை!

ஆப்கனிஸ்தானில் பத்திரிகையாளர் மற்றும் ஓட்டுநர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.  ஆப்கனிஸ்தானில் உள்ள ஜலாலாபாத்தில் அரபனோ கேலே எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய தொலைக்காட்சி பத்திரிகையாளர் ஒருவர் தனது காரில் டிரைவருடன் வேலைக்கு சென்றுகொண்டிருந்துள்ளார். அப்பொழுது இவர் சென்றுகொண்டிருந்த காரின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில்பெண் பத்திரிகையாளரும் , ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த கொலைக்கு பின்னல் தங்களது குழு இல்லை என தலிபான் தீவிரவாத அமைப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

டிரைவர் போட்ட பிரேக்கால் கண்ணாடியை உடைத்துக் கொண்டு சாலையில் விழுந்த கண்டக்டர்!

சென்னை ஆவடி அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியில் அரசு பேருந்து சென்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது, பேருந்தின் குறுக்கே குழந்தை ஒன்று திடீரென ஓடியதால், ஓட்டுநர் உடனடியாக பிரேக் பிடித்துள்ளார். அப்போது பயணிகளுக்கு பயணசீட்டு கொடுத்துக் கொண்டிருந்த நடத்துனர் ஆறுமுகம் நிலைதடுமாறி பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு சாலையில் விழுந்துள்ளார். இவர் தவறி விழுந்ததில், ஆறுமுகம் மீது கண்ணாடி துகள்கள் குத்தியதால் அவர் படுகாயம் அடைந்துள்ளார். இதனையடுத்து, இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடிவேல் பட … Read more

லாரி ஓட்டுநரை தாக்கி 10 கோடி மதிப்பிலான செல்போன்களை லாரியில் கடத்திய மர்ம கும்பல்!

ஆந்திர மாநிலத்தில் லாரி ஓட்டுநரை தாக்கிவிட்டு 10 கோடி மதிப்பிலான செல்போன்களை அடுத்த லாரியில் வைத்து கடத்தி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர் காவல்துறையினர். காஞ்சிபுரத்தை சேர்ந்த தனியார் செல்போன் தயாரிப்பு நிறுவன கிடங்கிலிருந்து ஆந்திராவிற்கு செல்போன்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டு உள்ளது. அப்போது சில மர்ம நபர்கள் லாரி ஓட்டுநரை தாக்கிவிட்டு, அந்த லாரியை கடத்திச் சென்றுள்ளனர். இந்நிலையில் கடத்தப்பட்ட லாரி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி அருகே உள்ளதாக காவல்துறையினருக்கு … Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை பள்ளியில் வைத்து செருப்பால் அடித்த தாய்.!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சார்ந்த பாலக்கோரேரி பகுதியில் ஒரு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பல கிராமங்களில் இருந்து  மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.பெரும்பாலான மாணவிகள் ஆட்டோக்களில் பள்ளிக்கு வருகின்றன. இந்நிலையில்  அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் (28) கடந்த ஒரு வாரமாக  10-ம் வகுப்பு மாணவிக்கு  பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மாணவி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.இதையெடுத்து நேற்று காலை வழக்கம்போல் மாணவியை பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு … Read more