பரபரப்பு: பஸ் டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் ஆபாச வீடியோ..!

மத்திய பிரதேசத்தில் உள்ள தலைநகர் போபால் அருகே உள்ள வித்யாநகர் பேருந்து நிலையத்தில் அரசு பஸ் டிக்கெட் வழங்குவதற்காக நவீன இயந்திரம் உள்ளது. கடந்த மாதம் 28-ம் தேதி இந்த இயந்திரத்தில் திரையில் திடீரென 30 விநாடிகள் ஆபாச வீடியோ ஒளிபரப்பாகி  உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்தத வீடியோ காட்டு தீ போல மத்திய பிரதேசம் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.பின்னர் சைபர் பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம் போக்குவரத்து … Read more

பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிப்ரவரி 1 முதல் சிபிஐ (எம்) தொடர் மறியல்

அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் அநியாய பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்களும், அனைத்துப் பகுதி பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் போராடி வருகின்றனர். குறிப்பாக லட்சக்கணக்கான மாணவர்கள் கட்டண உயர்வை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராடுவது என்ற உறுதியோடு வீதியில் இறங்கி வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நியாயமானக் குரலை ஏற்று கட்டண உயர்வை ரத்து செய்வதற்கு பதிலாக, அடக்குமுறையை எடப்பாடி அரசாங்கம் ஏவி வருகிறது. ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் … Read more

தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வு குறித்த மனு தள்ளுபடி-உயர்நீதிமன்றம்

தமிழக அரசு கொண்டு வந்துள்ள பேருந்து கட்டண உயர்வு குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரித்த உயர்நீதிமன்றம், இதில் தலையிட முடியாது என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 20ஆம் தேதி முதல் பேருந்து கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது. இந்த திடீர் உயர்வால் பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதனை எதிர்த்து இடதுசாரி கட்சிகள், மக்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பலவித போராட்டங்கள், சாலை மறியல்களில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் ஜனவரி 23-25 தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதல் நாளான இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 1. பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறுக சிபிஐ(எம்) … Read more

பேருந்து கட்டண உயர்வு குறித்து ஜி.வி.பிரகாஷ் குமார்

பேருந்து கட்டண உயர்வு தமிழக மக்களை பெரிய சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய அரசாங்கத்திடம் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை குறித்து நடிகரும் இசைமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், விவசாயிகளின் கஷ்டத்தை மனதில் வைத்து கொண்டு மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://twitter.com/gvprakash/status/955640929091661824 விவசாய ஏழை எளிய உழைக்கும் பாட்டாளி மக்கள் தாங்கமுடியாத பேருந்துகட்டண உயர்வு சுமையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் — G.V.Prakash Kumar (@gvprakash) January 23, 2018

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, மாதர் சங்கத்தின் சார்பில் போராட்டம்…!!

கோவை :  அரசுக்கு எதிராக வாக்குகள் பெறும் இயக்கம் தொடங்கியுள்ளனர். கோவை அரசு மருத்துவமனையின் முன்பு நியாயம் மற்றும் அநியாயம் என இரண்டு பெட்டிகளில் வாக்கு பெட்டி, வாக்கு சீட்டுகளுடன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கோவை மாவட்ட குழுசார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. திரளாக மக்கள் பஸ் கட்டண உயர் வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர்.

அரசு பேருந்துகளின் கட்டண உயர்வு-தமிழக மக்கள் எதிர்ப்பு

பேருந்துகளின் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கடும் கோபத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பேருந்து கட்டணம் தமிழகம் முழுவதிலும் உள்ள மக்களை வெகுவாக பாதித்துள்ளது. இதன் காரணமாக பேருந்துகளில் பயணிப்பதற்கு பதிலாக மக்கள் அதிகமாக மின்சார ரயில்களை நோக்கி வர தொடங்கியிருக்கிறார்கள். இதனால் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் ஒண்டிகுப்பத்தில் சென்னை-திருப்பதி சாலையில் பேருந்துகளை சிறைபிடித்து, மறியல் நடந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். அதே போல் … Read more

நஷ்டத்தை மக்கள் தான் சரிசெய்ய வேண்டும்-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

பேருந்துகளின் கட்டண உயர்வு என்பது தவிர்க்க முடியாதது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், “பேருந்துகள் கடும் இழப்பை சந்தித்துள்ளது. பேருந்துகள் மக்களுடையது, இதை மக்கள் தான் சரிசெய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்ற மாநிலங்களிலேயே தமிழகத்தில் தான் பேருந்து கட்டணம் குறைவு என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து, நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கைத்தறித் துறை … Read more

ஆண்டுதோறும் பேருந்து கட்டணம் மாற்றி அமைக்கப்படும்-தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் அரசு பஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. சாதாரண பஸ்களில் குறைந்தபட்சம் ரூ.7 ஆகவும், நகர பேருந்துகளில் ரூ.6 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விரைவு, சொகுசு பஸ்களிலும் கட்டணம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.நேற்று அறிவிக்கப்பட்ட பேருந்து கட்டண உயர்விற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது. அதில், இனிமேல் ஆண்டுதோறும் பேருந்து கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உயர்மட்டக்குழு அறிக்கைப்படி … Read more