TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் – தமிழ்நாடு அரசு

tn government

தமிழகத்தில் அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பணியாற்ற விரும்பும் பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி … Read more

பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும்! விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள்!

thol thirumavalavan

தென்மாவட்டங்களில் இயற்கை பேரிடர் காரணமாக த.நா.பொதுத் தேர்வாணையம் நடத்தும் பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியதாவது ” தமிழ்நாடு பொதுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வரும் ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ள பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என்று விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தூத்துக்குடி, திருநெல்வேலி … Read more

சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

schools holidays

சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் (டிச.08) விடுமுறையை அறிவித்தது தமிழ்நாடு அரசு. மழை பாதிப்பு எதிரொலியாக சென்னையில் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை நிவாரண மற்றும் மீட்பு பணிகள் சில இடங்களில் நடைபெற்று வருவதால் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் தொடர்ந்து 5-ஆவது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு … Read more

பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான வரம்பு உயர்வு – அரசாணை வெளியீடு!

பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான வரம்பை  உயர்த்தி தமிழக அரசு அரசாணைவெளியிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோர்களின் வருமான வரம்பு 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவிகள் பயன்பெறும் … Read more

#Breaking:புதிய ஸ்மார்ட் ரேசன் அட்டைக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பம் – தமிழக அரசு தகவல்..!

புதிய ரேசன் ஸ்மார்ட் அட்டைக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிய ரேசன் அட்டை கோரி மே மாதம் முதல் செப்.26 ஆம் தேதி வரை கடந்த 5 மாதத்தில் 10 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து,விண்ணப்பித்தவர்களில் 93% பேருக்கு புதிய ரேசன் அட்டை வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது,10 லட்சம் விண்ணப்பங்களில் 7.28 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும்.2.61 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் … Read more

“அரசுப் பணம் வீண்;மக்களுக்காக திட்டங்கள், திட்டங்களுக்காக மக்கள் அல்ல”- ஓபிஎஸ்..!

மக்களின் வரிப் பணம் வீணாகக்கூடிய நடைபாதை அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இதெல்லாம் மாநில அரசின் கடமை: “சாலைகளின் இருமருங்கிலும் இடத்திற்கு தகுந்தாற்போல் பாதசாரிகளின் அளவிற்கு பொருத்தமான அகலம் கொண்ட நடைபாதைகள் அமைப்பதும், அந்த நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படாமல் பார்த்துக் கொள்வதும், அவ்வாறு அமைக்கப்படும் நடைபாதைகள் பாதசாரிகள் நடப்பதற்கு ஏதுவாக இருக்கிறதா என்பதை கண்காணிப்பதும் மாநில … Read more

கொரோனா நோயாளியின் ஆக்சிஜன் 90க்கு கீழ் இருந்தால் தான் சிகிச்சை..!

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவு 90 ஐ விட குறைவாக இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணத்தால் தமிழக முதல்வர் ஊரடங்கை அறிவித்திருந்தார். இதனால் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும், கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பு இருப்பவர்களின் ஆக்சிஜன் அளவு … Read more

கொரோனாவால் இறந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிவாரணத்தொகை..!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணத்தால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தளர்வில்லாத ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார். தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக பொறுப்பேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலில் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். கொரோனா நிவாரண நிதியாக அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக இதற்கு முதலில் கையெழுத்திட்டார்.  அதில் இம்மாதமே முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.  அதன்படி, தினமும் 200 … Read more

அரசுப்பணி வழங்க தமிழக அரசு முடிவெடுக்கலாம்-உயர்நீதிமன்றம் ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என்று பலரும் வேலை பார்த்து வருகின்றனர். இதில், இளம் மருத்துவர்களின் இழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா பணியில் ஈடுபட்டு இறக்கும் தூய்மை பணியாளர்களுக்கு அரசு வேலை வழங்குவதை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதை குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது.  கொரோனா பணியில் ஈடுபட்டு கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், … Read more

வீடு இல்லாத மக்களுக்கும் தடுப்பூசி – தமிழக அரசு அறிவிப்பு..!

வீடு இல்லாத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் ஆயுதமாக தடுப்பூசி தற்போது செயல்பட்டு வருகிறது. அதனால் தடுப்பூசியை போடுவதில் மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் வீடு இல்லாத மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வீடு இல்லாதவர்களும் இந்த கொரோனா பாதிப்பில் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதை … Read more