அடுத்த மாதம் வங்கிக் கணக்கில் ரூ.2000 வருகிறது? எப்படி தெரியுமா?

pongal parisu

பொங்கல் பண்டிகைக்கு, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பணம் ரூ.1000 கொடுக்க அரசு திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே, மகளிர் உரிமை தொகை ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகை ரூ.1000 கொடுக்க ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஜனவரி 14 ஞாயிறு, 15ம் தேதி பொங்கல் என்பதால், அதற்கு முன்னதாக ஜனவரி 12 அல்லது 13ம் தேதியே பொங்கல் பணம் 1000 ரூபாயும், மகளிர் உரிமை தொகை ரூ.1000 … Read more

#Breaking : 1000 ரூபாய் பொங்கல் பரிசு தொகை.! தமிழக அரசு அறிவிப்பு .!

பொங்கல் பரிசாக 1000 ரூபாய் ரொக்க பணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் குடியிருப்போருக்கு வரும் 2023 பொங்கல் பரிசாக 1000 ரூபாய் ரொக்கப்பணம் , 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பொங்கல் பரிசானது ஜனவரி 2ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் … Read more

#Justnow : பொங்கலுக்கு புதிய டிசைனில் வேட்டி, சேலை..! – தமிழக அரசு

பத்து வருடங்களுக்குப் பின் புதிய டிசைனில் இலவச வேட்டி சேலை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும், குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை தமிழக அரசு வழங்கி வந்த நிலையில், இந்தாண்டும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், பத்து வருடங்களுக்குப் பின் புதிய டிசைனில் இலவச வேட்டி சேலை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. … Read more

பொங்கல் முடித்து ஊர் திரும்புவோருக்காக 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

பொங்கல் முடித்து ஊர் திரும்புவோருக்காக 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். அந்த வகையில் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு வசதியாக கடந்த 11 ஆம் தேதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த பேருந்துகளில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட்டுள்ளதால், நாளை முதல் பண்டிகை முடித்து ஊர் திரும்புவோருக்காக16 … Read more

கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 680 கோடிக்கு மது விற்பனை ….!

கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் ரூ.675.19 கோடிக்கு மேல் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக பண்டிகை நாட்களில் துணிக்கடைகளில் எப்படி கூட்டம் அலைமோதுகிறதோ, அதே போல மதுபானக்கடைகளிலும் மதுபிரியர்கள் கூட்டம் நிரம்பி வழிவதை காண முடியும். சாதாரண நாட்களை விட பண்டிகை நாட்களில் மது விற்பனை அதிகளவு நடைபெறும். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 680 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளதாம். பொங்கலுக்கு மறு தினமான இன்று திருவள்ளுவர் … Read more

சூரியூர் ஜல்லிக்கட்டு – மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு …!

திருச்சியிலுள்ள பெரியசூரியூரில் நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் பொழுது மாடு முட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையடுத்து மதுரையில் உள்ள பாலமேடு மற்றும் திருச்சியில் உள்ள பெரிய சூரியூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெரிய சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 350 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடு முட்டியதில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த … Read more

முதல்வர் வீட்டிற்கு நேரில் சென்று பொங்கல் வாழ்த்து தெரிவித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் ….!

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் முதல்வர் வீட்டிற்கு நேரில் சென்று பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வெகு விமரிசையாக இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். தற்பொழுதும் இவர் தமிழக முதல்வர் … Read more

குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடிய சூர்யா …..!

நடிகர் சூர்யா அவரது குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள்  தங்கள் இல்லங்களில் கோலாகலமாக பொங்கல் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா அவர்களும் அவரது மனைவி மற்றும் சகோதரருடன் இணைந்து பொங்கல் கொண்டாடி உள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிடுவேன்..! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். தமிழர் திருநாளை பொங்கல் திருநாள் இன்று அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் – தமிழ் இனநாள் – பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்! கழக ஆட்சி மலர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் திருநாளில் மேலும் மேலும் தமிழ்நாட்டை மேன்மையுறச் … Read more

பொங்கல் வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட்..!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இன்று நாடு முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தமிழகத்தின் எழுச்சி மிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த நாளன்று அனைவருக்கும் குறிப்பாக உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். இயற்கையுடன் நமது பிணைப்பும் நமது சமூகத்தின் … Read more